மாதம்பே பகுதியில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கியதாகக் கூறப்படும் 65 வயது வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாதம்பே பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாதம்பே, கருக்குவட்டவ பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர் தனது கடையில் வைத்து இந்தச் சம்பவத்தை மேற்கொண்டதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
சம்பவம் இடம்பெற்ற தினத்தில், சிறுமி பிஸ்கட் வாங்குவதற்காக சந்தேகநபரின் கடைக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது சிறுமியை கடைக்குள் அழைத்துச் சென்று குறித்த தொல்லையை வழங்கியதாக சிறுமியின் தாயார் முறைப்பாடு செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது மருத்துவ பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக சிலாபம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








