பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க Bandaranaike International Airport இரண்டாவது பயணிகள் முனையத்தின் கட்டுமானப் பணிகளை வரும் நவம்பர் மாதத்தில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, திட்டம் மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து 30 மாதங்களுக்குள் பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது.
துறைமுகங்கள், சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் வலுசக்தி அமைச்சர் Anura Karunathilaka மற்றும் இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் Isomata Akio ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இவ்விடயம் கவனம் பெற்றுள்ளது.
இதில் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (JICA) பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
குறித்த திட்டத்திற்கான கடன் மற்றும் ஒப்பந்த அனுமதி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது முக்கிய நோக்கமாக இருந்ததாகவும், அவை நிறைவடைந்ததும் நவம்பரில் கட்டுமானம் மீண்டும் ஆரம்பிக்க முடியும் எனவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
இரண்டாம் பயணிகள் முனையத்தின் கட்டுமானம் முதன்முதலில் 2020 டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இதற்காக ஜப்பானிய அரசாங்கத்தினால் 75 பில்லியன் யென் கடன் உதவி வழங்கப்பட்டிருந்தது.
எனினும் 2022 ஏப்ரலில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
பின்னர் 2024 இறுதியில் கொள்முதல் நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டு, 2025 ஆம் ஆண்டில் ஏலக் கோரல்கள் நிறைவு செய்யப்பட்டுள்ளதாகவும், தற்போது ஒப்பந்தக்காரர் தேர்வு இறுதி கட்டத்தில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், திட்டத்தை நிறைவு செய்வதற்கான கடன் விநியோகத்திற்கு ஜப்பான் தரப்பு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கான கடன் ஒப்புதலை நிதி அமைச்சுடன் விரைவில் இறுதிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.







