Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழரசுக் கட்சியை சுழற்றி அடிக்கும் பதவி முரண்பாடுகள்; யாழ் இளைஞர் அணித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

தமிழரசுக் கட்சியை சுழற்றி அடிக்கும் பதவி முரண்பாடுகள்; யாழ் இளைஞர் அணித் தலைவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

3 days ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட கிளை மற்றும் தொகுதிக்கிளைகளுக்கான புதிய நிர்வாகத் தெரிவுகள், கட்சியின் யாப்பு விதிகளுக்கு முரணான வகையிலும் முறைகேடான முறையிலும் நடத்தப்பட்டுள்ளதாகக் கூறி, அக்கட்சியின் யாழ் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கந்தசாமி பிருந்தாபன் உத்தியோகபூர்வமாக முறையிட்டுள்ளார்.

இது தொடர்பாக, வலுவான காரணங்கள் மற்றும் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி, கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களுக்கும், மத்திய குழுவின் சிறப்பு அழைப்பாளர்களுக்கும் அவர் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அவரது கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 4 முக்கிய குற்றச்சாட்டுகள் வருமாறு,

காங்கேசன்துறை தொகுதி நிர்வாகத் தெரிவில் முறைகேடு;

கடந்த 2025 அக்டோபர் 21 அன்று, காங்கேசன்துறைத் தொகுதிக்கான நிர்வாகத் தெரிவு யாப்பு விதிகளுக்கு முரணாக நடத்தப்பட்டுள்ளது. மாவட்டத் தலைவர் மற்றும் செயலாளருக்குத் தெரியாமலும், ஏற்கனவே இயங்கிவரும் தொகுதி நிர்வாகத்திற்கு அறிவிக்காமலும், கட்சியின் பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளரால் குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் மட்டும் அழைக்கப்பட்டு இந்தத் தெரிவு நடத்தப்பட்டுள்ளது.
இது குறித்து தொகுதி நிர்வாகிகள் ஏற்கனவே கட்சியிடம் உத்தியோகபூர்வமாக முறையிட்டுள்ளனர்.

வட்டுக்கோட்டைத் தொகுதி தெரிவில் யாப்பு மீறல்;

கடந்த 2026 ஏப்ரல் 23 அன்று, வட்டுக்கோட்டைத் தொகுதியில் ‘வெற்றிடம் நிரப்புதல்’ என்ற பெயரில் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது. இதன்போதும் மாவட்டத் தலைவர், செயலாளருக்கு அறிவிக்கப்படாமல், பதில் தலைவர் மற்றும் பதில் செயலாளரால் குறிப்பிட்ட சில உறுப்பினர்கள் தொலைபேசி மூலம் அழைக்கப்பட்டுள்ளனர். பிரதேச சபை உறுப்பினர்களைக் கொண்டும், காரைநகர் பிரதேசத்தையும் இணைத்தும் நடத்தப்பட்ட இந்தத் தெரிவு யாப்பு விதிகளுக்கு முரணானது என ஊடகங்களில் செய்திகள் வெளியானதோடு, தொகுதி உறுப்பினர்களும் கட்சி நிர்வாகத்திற்கு முறையிட்டுள்ளனர்.

யாழ் மாவட்ட கிளையின் அராஜகமான அதிகார துஷ்பிரயோகம்;

கடந்த 2026 மே 31 அன்று, யாழ் மாவட்ட கிளை உத்தியோகத்தர் தெரிவுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இல்லாத நிலையில், கட்சியின் பதில் பொதுச் செயலாளரே இக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கியிருந்தார். இதன்போது, புதிய நிர்வாகத் தெரிவு குறித்து உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன்வைக்க சந்தர்ப்பம் கோரியும் அதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

“தலைமைப் பீடத்தில் (Table) இருந்து தெரிவு செய்யப்பட்டால், அதற்கு எதிராக மறு தெரிவு கோரக் கூடாது” என மிரட்டும் தொனியில் பதில் பொதுச் செயலாளர் எச்சரித்துள்ளார். ஜனநாயகக் கட்சியில் அங்கத்தவர்களின் கருத்துக்களைக் கேளாது நடத்தப்பட்ட இந்த அராஜகமான, ஜனநாயக விரோதச் செயல், ஜனநாயகத்திற்குச் சாவுமணி அடிப்பது போல் அமைந்துள்ளதாக கடிதத்தில் சாடப்பட்டுள்ளது.

நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் முன்னெடுக்கப்பட்ட தெரிவு;

கடந்த தலைவர் தேர்தலின் போது, ‘தொகுதி’ என்பது ‘பிரதேச ரீதியானது’ என மத்திய செயற்குழுவில் தீர்மானிக்கப்பட்டு, வலிகாமம் தென்மேற்கு மற்றும் வலிகாமம் தெற்கு என இரு பிரதேச பிரிவுகளாக பொதுச்சபைக்கு தலா 5 பேர் வீதம் (மொத்தம் 10 பேர்) தெரிவு செய்யப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது.

இந்த நிர்வாக நடைமுறைக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், நீதிமன்ற வழக்கை மதிக்காமல், ஏற்கனவே பிரதேச பிரிவாக இருந்த நிர்வாக முறையை தற்போது மீண்டும் ‘தொகுதி’ என ஒன்றாக இணைத்துத் தெரிவு செய்தமை எந்த அடிப்படையில்? யாருடைய தீர்மானம்? என்ற கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாப்பு விதிகளையும், ஜனநாயகப் பண்புகளையும் பாதுகாக்கும் பொருட்டே இந்த ஆட்சேபனைக் கடிதத்தை மத்திய செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்களிற்கு அனுப்பியுள்ளதாக யாழ் மாவட்ட இளைஞர் அணித் தலைவர் கந்தசாமி பிருந்தாபன் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் தற்போது கட்சியின் உள்மட்ட அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?
அரசியல்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?

June 16, 2026
செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா
அரசியல்

செல்வம் அடைக்கலநாதன் ரெலோவின் தலைமையாகயிருக்க தகுதியில்லாதவர்; மூத்த உறுப்பினர் ஏகனாதன் வியஜபவானந்தா

June 16, 2026
வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு
செய்திகள்

வடக்கு மற்றும் கிழக்கில் மீட்கப்பட்ட தங்கப் பொருட்கள் தொடர்பான எடையிடல் பணிகள் நிறைவு

June 16, 2026
மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்
செய்திகள்

மட்டு கல்லடியில் ஆலயத்தில் இரு குழுக்களுக்கிடையே மோதல்; தடுக்கச்சென்ற முதியவரின் வீட்டை சேதப்படுத்திய நபர்கள்

June 16, 2026
இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன
செய்திகள்

இந்த ஆண்டு 120,000 பேருக்கு அரச சேவையில் வேலைவாய்ப்பு; அமைச்சர் சந்தன அபேரத்ன

June 16, 2026
வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்
செய்திகள்

வவுனியா – செட்டிக்குளம் வழித்தடத்தில் ‘சிசு செரிய’ பஸ் சேவை ஆரம்பம்

June 16, 2026
Next Post
ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைக்கண்டு ரவூப் ஹக்கீம் ஏன் அச்சப்படுகிறார்; NPP எம்பி கேள்வி

ஈஸ்டர் தாக்குதல் விசாரணையைக்கண்டு ரவூப் ஹக்கீம் ஏன் அச்சப்படுகிறார்; NPP எம்பி கேள்வி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.