
மட்டக்களப்பு கல்வி வலயத்தால் மாகாண மட்டத்திற்கு தெரிவான கரம் அணிகளுக்கிடையேயான போட்டியானது 2026 ஜூன் 12 ஆம் திகதி கல்லடி விவேகானந்தா பெண்கள் பாடசாலையில் நடைபெற்றது.

இப்போட்டியில் பங்கேற்ற மட்/மாவிலங்கத்துறை விக்னேஸ்வரா பாடசாலையின் 17 வயதுக்குட்பட்ட ஆண் மற்றும் பெண் கரம் அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்று முதலிடத்தைத் தனதாக்கிக் கொண்டன.

இதன் மூலம் ஆண் மற்றும் பெண் பிரிவுகளில் இரண்டிலும் சம்பியன் பட்டத்தை வென்ற விக்னேஸ்வரா பாடசாலை மாணவர்களுக்கும் பயிற்றுவிப்பாளர்களுக்கும் பாடசாலை சமுகம் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.










