யால தேசிய சரணாலயத்திற்குள் வனவிலங்கு சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் ஐந்து சுற்றுலாப் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் யால தேசிய சரணாலயத்தின் “சுது வெலிமுல்ல” பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சஃபாரி பயணத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு ஜீப் வண்டிகளில் இருந்த குழுவினர், சரணாலய விதிகளை மீறி வாகனங்களிலிருந்து கீழே இறங்கி நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது.
இதன்போது அவர்கள் வனவிலங்கு அதிகாரிகளை அச்சுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு, திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, யால ஜீப் சங்கங்களின் கூட்டமைப்பு கருத்து தெரிவிக்கையில், சரணாலய விதிகளை மீறும் ஜீப் சாரதிகள் மற்றும் பயணிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஜீப் வண்டிகள் குறித்து முறையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், அவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாததாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.








