ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் வட்டவளை, கரோலினா பகுதியில் நேற்று (15) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கரவண்டி ஒன்று சுமார் 75 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி, சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததன் காரணமாக வீதியை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்துள்ளது.
விபத்து இடம்பெற்ற போது, வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஒருவர் முச்சக்கரவண்டியில் பயணித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் முச்சக்கரவண்டி பலத்த சேதத்திற்குள்ளாகியுள்ளதுடன், காயமடைந்த சாரதி உடனடியாக வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்துக்கான காரணம் தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








