Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை-அரச ஊழியர்களே திருடுகிறார்கள்; NPP அமைச்சர் லால்காந்த

3 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தற்போது அரசியல்வாதிகள் திருடுவதில்லை என்றாலும், அரச ஊழியர்கள் இன்னும் திருடிக்கொண்டே இருக்கிறார்கள் என்று விவசாய, காணி, நீர்ப்பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே. டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் புதிய ஊழியர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்குவதற்காக அண்மையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் கே. டி. லால்காந்த இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பிரபுக்கள் அல்லாத ஒரு வர்க்கத்தின் ஆட்சியாக நாங்கள் தொடர்ந்து ஆட்சியில் இருப்போம் என்ற உறுதியில் இருக்கிறோம்.

2024 வரை எதுவும் இல்லை என்றுதான் ரணில் விக்ரமசிங்க கூறினார். பேன்ட்களின் வாரை (பெல்ட்) இறுக்கிக் கொள்ளுமாறு கூறினார். ஏன், உண்ண உணவும் குடிக்க நீரும் இல்லாதபோது வயிறு ஒட்டிப்போகுமே.

பெல்ட்டை இறுக்கிக் கொள்ள வேண்டுமென்றால், உட்பக்கமாக இன்னும் இரண்டு மூன்று ஓட்டைகள் போட வேண்டியிருக்கும். ரணில் அப்படித்தான் ஓட்டை போட்டுக்கொள்ளச் சொன்னார்.

நாட்டை மீட்டெடுக்க வேண்டுமென்றால் 2048 வரை இருக்குமாறு கூறினார். நாங்கள் இப்போது அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளையும் ஆரம்பித்துள்ளோம். அரச ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குகிறோம்.

இந்த யுத்தம் (நெருக்கடி) வந்த நேரத்திலும் சம்பளத்தைக் குறைக்கவோ, விவசாயிகளின் மானியங்களை நீக்கவோ எதையும் செய்யவில்லை, அனைத்தையும் முகாமைத்துவம் செய்து மிகச் சிறப்பாகக் கொண்டு செல்கிறோம்.

இப்போது நாட்டில் இருப்பது பணம் இல்லாத பிரச்சினை அல்ல. 100 ரூபாய் ஒதுக்கினால் 60 ரூபாய்க்குத்தான் வேலை நடக்கிறது. அரச சேவையில் இன்னும் திருடுகிறார்கள். அரசியலில் இல்லை.
இன்னும் மக்கள் திட்டுகிறார்கள், எங்களைத்தான் திட்டுகிறார்கள். ‘என்ன, நீங்கள் இன்னும் இதை மாற்றவில்லையே’ என்று கேட்கிறார்கள்.” என்றார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் சரிவு!
செய்திகள்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் திடீர் சரிவு!

June 17, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி; இலங்கை குடியுரிமை பெற்ற இந்தியர் கைது

June 17, 2026
ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!
செய்திகள்

ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!

June 17, 2026
இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க
செய்திகள்

இலங்கை கிரிக்கட் அணியில் உள்வாங்கப்பட வேண்டிய சிறந்த வீரர் குகநாஸ் மாதுலன்; லசித் மாலிங்க

June 17, 2026
செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு
செய்திகள்

செம்மணிக்கு விஜயம் செய்ய நீதிமன்ற அனுமதியை கோரியுள்ள நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழு

June 17, 2026
நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?
அரசியல்

நளிந்த ஜயதிஸ்ஸவின் வாழைக்குலை மதில் பாய்ந்த கதையில் கோட்டா?

June 16, 2026
Next Post
ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!

ஜி7 மேடையில் மீண்டும் எதிரொலிக்கும் உக்ரைன் போர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.