பிரான்ஸில் நடைபெற்று வரும் ஜி7 நாடுகள் கூட்டமைப்பின் உச்சிமாநாட்டில், உலக நாடுகளின் கவனம் மீண்டும் உக்ரைன் போர் விவகாரம் மீது திரும்பியுள்ளது.
‘நேட்டோ’ பாதுகாப்புக் கூட்டமைப்பில் உக்ரைன் இணைய விரும்புவதைக் கண்டித்து, அந்நாடு மீது ரஷ்யா படையெடுப்பைத் தொடங்கி, 4 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. கடந்த சில மாதங்களாக மத்திய கிழக்கில் நிலவி வந்த அமெரிக்கா-ஈரான் மோதல் போக்கு, உக்ரைன் விவகாரத்தைப் பின்னுக்குத் தள்ளியிருந்தது.
இந்நிலையில், ஈரான் உடனான மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான போர் நிறுத்தத்தை அறிவித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இனி தனது கவனம் உக்ரைன்மீது இருக்கும் என்றும், ஈரான் விவகாரம் விரைவில் கடந்துபோன ஒன்றாக மாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.








