தெல்தெனியா பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த காரொன்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று (17) மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிடைத்த தகவலின் அடிப்படையில் தெல்தெனியா பொலிஸ் நிலையம் அதிகாரிகள் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மீட்கப்பட்ட பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான நீதவான் பரிசோதனை இன்னும் சற்று நேரத்தில் நடைபெறவுள்ளதாகவும், அதன் பின்னர் மேலதிக தகவல்கள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சடலம் எவ்வாறு காருக்குள் வந்தது மற்றும் மரணத்திற்கான காரணம் என்ன என்பது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








