‘அஸ்வெசும’ நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் முதற்கட்ட பயனாளிகளுக்கான ஜூன் மாத கொடுப்பனவுகளை நாளை (18) வழங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, 1,373,248 பயனாளி குடும்பங்களுக்கு மொத்தமாக 10.9 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான நிதி, நாளை அவர்களின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.
நலன்புரி நன்மைகள் சபையின் தலைவர் நிமல் கொடவலகெதர வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த கொடுப்பனவு ‘அஸ்வெசும’ திட்டத்தின் முதற்கட்டத்தில் தகுதி பெற்ற பயனாளிகளுக்கே வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை முதல் சம்பந்தப்பட்ட பயனாளிகள் தங்களது ‘அஸ்வெசும’ வங்கி கணக்குகள் ஊடாக கொடுப்பனவுத் தொகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.








