Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை; பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு

அமெரிக்க தம்பதியருக்கு பிறந்த ஆசியக் குழந்தை; பெற்றோர் எடுத்துள்ள முக்கிய முடிவு

5 hours ago
in உலக செய்திகள், செய்திகள்

அமெரிக்காவில் வாழும் ஒரு வெள்ளையின தம்பதியருக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளாக குழந்தையில்லாததால் செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றுக்கொண்டார்கள்.

குழந்தை பிறந்தபோது, குழந்தையைக் கண்ட அவர்கள் அதிர்ச்சியில் உறைந்தார்கள்.

டிஃபனி, ஸ்டீவன் (Tiffany Score and Steven Mills) தம்பதியருக்கு ஐந்து ஆண்டுகளாக குழந்தையில்லை.

ஆகவே, செயற்கைக் கருத்தரித்தல் முறையில் கருவுற்ற டிஃபனி, டிசம்பர் மாதம் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்.

குழந்தை பிறந்தபோது, அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. ஆம், அது ஒரு வெள்ளையினக் குழந்தை இல்லை. அது ஒரு தெற்காசியக் குழந்தை.

அத்துடன், DNA சோதனையிலும், அந்தக் குழந்தையின் உடலில் அவர்கள் இருவருடைய DNAவும் இல்லை என்பதும் தெரியவந்தது.

விடயம் என்னவென்றால், இப்போது Shea என பெயரிடப்பட்டுள்ள அந்தக் குழந்தை அவர்களுடன் நன்றாக ஒட்டிக்கொண்டுவிட்டாள்.

அவர்களும் அவளை தங்கள் சொந்தக் குழந்தையாக கண்ணும் கருத்துமாக, அன்பும் பாசமுமாக வளர்த்துவருகிறார்கள்.

ஆனாலும், அவளுடைய உண்மையான பெற்றோர் அவளைத் தேடிக்கொண்டிருக்கலாம், ஒருவேளை அவர்கள் குழந்தையை தங்களிடமிருந்து பிரித்துவிடலாம் என்ற கவலை தம்பதியருக்கு இருந்தது.

இந்நிலையில், அந்தக் குழந்தையின் உண்மையான பெற்றோரை கண்டுபிடித்துவிட்டார்கள் டிஃபனி, ஸ்டீவன் தம்பதியர்.

அத்துடன், அந்த தம்பதியருடன் பேசி, Sheaவை வளர்ப்பது தொடர்பில் ஒரு முடிவுக்கும் வந்துவிட்டார்கள் அவர்கள்.

அதாவது, டிஃபனி, ஸ்டீவன் தம்பதியர்தான் Sheaவின் நிரந்தர பராமரிப்பு பெற்றோர் (permanent custodial parents of their daughter) என்பதை உறுதி செய்யும் வகையில் நீதிபதி ஒருவர் முன்னிலையில் இருதரப்புக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று செய்துகொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், Sheaவின் உண்மையான பெற்றோர் குறித்த விவரங்களை இரகசியமாகவே வைத்திருக்கப்போவதாகவும் டிஃபனி, ஸ்டீவன் தம்பதியர் தெரிவித்துள்ளார்கள்.

இதற்கிடையில், தங்கள் கருமுட்டைகளை மாற்றிய செயற்கை கருத்தரித்தல் நிலையம் மீது டிஃபனி, ஸ்டீவன் தம்பதியர் வழக்குத் தொடர்ந்திருந்தாலும், இப்போதைக்கு எங்களுக்கு இருப்பது கோபம் அல்ல என்கிறார்கள் அவர்கள்.

ஆம், இப்போது எங்களுக்கு மகிழ்ச்சியும் நன்றியுணர்வும்தான் மேலோங்கியுள்ளது என்று கூறும் அவர்கள், எங்களுக்கு ஒரு அழகான, ஆரோக்கியமான மகள் கிடைத்துள்ளாள் என்னும் நன்றியுணர்வே எங்களுக்கு உள்ளது என்கிறார்கள்.

அவளை கைகளில் ஏந்திக்கொள்ளவும், முத்தமிடவும், நேசிக்கவும் எங்களுக்குக் கிடைத்த வாய்ப்புக்காக எங்களுக்கு நன்றியுணர்வே மேலோங்கியுள்ளது என்கிறார்கள் அவர்கள்.

எங்கள் சொந்தப் பிள்ளையை நாங்கள் எப்படி நேசிப்போமோ, Shea மீது நாங்கள் காட்டும் அன்பும் அதே அளவில்தான் இருக்கும், அதில் எந்தக் குறைவும் இருக்காது என்கிறார்கள் டிஃபனி, ஸ்டீவன் தம்பதியர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!
செய்திகள்

எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!

June 17, 2026
திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!
செய்திகள்

திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!

June 17, 2026
ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!
உலக செய்திகள்

ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!

June 17, 2026
அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!
செய்திகள்

அஸ்வெசும் பயனாளிகளுக்கு ஜூன் மாத கொடுப்பனவு நாளை வங்கி கணக்குகளில்!

June 17, 2026
கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!
செய்திகள்

கண்டி – தெல்தெனியாவில் காரிலிருந்து பெண் சடலம் மீட்பு; விசாரணை ஆரம்பம்!

June 17, 2026
பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்றதாக இருவர் கைது!
செய்திகள்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்றதாக இருவர் கைது!

June 17, 2026
Next Post
அரசு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றியுள்ளது; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!

அரசு விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஏமாற்றியுள்ளது; சஜித் பிரேமதாஸ குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.