முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற யானை தாக்குதல் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் இன்று (23) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் முல்லைத்தீவு குமுளமுனை பகுதியைச் சேர்ந்த இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த இளைஞர், இத்திமடு கிராமத்தில் உள்ள தனது வயல் நிலத்தைப் பாதுகாப்பதற்காக நேற்று இரவு வயல் காவலுக்குச் சென்றிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில், இன்று அதிகாலை வயலுக்குள் புகுந்த காட்டுயானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








