நாட்டின் பொருளாதாரத்தை முழுமையாக கட்டியெழுப்புவதற்கு 15 முதல் 20 ஆண்டுகள் வரை காலம் தேவைப்படும் என பிரதி அமைச்சர் சதுர அபேசிங்க தெரிவித்துள்ளார்.
புதிதாக திருமணமான இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைத் தடுப்பதற்காக அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுத்துள்ளது என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவது குறுகிய காலத்தில் சாத்தியமற்ற ஒன்று என குறிப்பிட்ட அவர், நீண்டகால திட்டமிடல் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியின் மூலமே அதனை அடைய முடியும் என்றார்.
இளைஞர்களுக்கு நாட்டுக்குள் அதிகளவான பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் வெளிநாடுகளுக்கான இடம்பெயர்வை குறைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நிலையை மாற்றுவதற்கு பொறுமையுடனும் தொடர்ச்சியான கொள்கை அமுலாக்கத்துடனும் செயற்பட வேண்டிய அவசியம் இருப்பதாகவும் பிரதி அமைச்சர் சதுர அபேசிங்க சுட்டிக்காட்டினார்.








