ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் பேரில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் இருந்தபோது உண்ணாவிரதத்தை ஆரம்பித்திருந்த அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிட்டுள்ளார்.
உண்ணாவிரதம் காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
தனது சட்ட ஆலோசகரின் அறிவுரையைத் தொடர்ந்து உண்ணாவிரதத்தை நிறுத்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.







