Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விசாரணையிலிருந்து தப்பிக்க சுரேஷ் சலே நடத்திய உண்ணாவிரத நாடகம்

விசாரணையிலிருந்து தப்பிக்க சுரேஷ் சலே நடத்திய உண்ணாவிரத நாடகம்

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சலே முன்னெடுத்த உண்ணாநோன்பு போராட்டம், சட்ட நடவடிக்கைகளில் இருந்து தப்பிக்கவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை திசைதிருப்பவும் மேற்கொள்ளப்பட்ட போலி நாடகம் என ஜனபலய கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் விதர்ஷன கன்னங்கர குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசிய அவர், சுரேஷ் சலேவின் உடல்நிலையை விசேட மருத்துவக் குழு பரிசோதித்தபோது, அவர் உண்மையில் உண்ணாநோன்பில் ஈடுபடவில்லை என்பது மருத்துவ ரீதியாக உறுதியானதாகத் தெரியவந்ததாகக் கூறினார். இதையடுத்து தனது உண்ணாநோன்பு போராட்டத்தை அவர் கைவிட்டதாகவும் தெரிவித்தார்.

மேலும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், விசாரணை அதிகாரிகளை நீக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அரசியல் அழுத்தத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இந்த போராட்டம் நடத்தப்பட்டதாகவும், விசாரணைக்கு தேவையான சான்றுகளை வழங்காமல் விசாரணையை தாமதப்படுத்தும் முயற்சியில் சுரேஷ் சலே ஈடுபட்டுள்ளதாகவும் விதர்ஷன கன்னங்கர குற்றம்சாட்டினார்.

அதேசமயம் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் தலைவர் சுரேஷ் சலேவின் மடிக்கணினி மற்றும் கையடக்கத் தொலைபேசி கடவுச்சொற்களை வழங்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தாம் மதிப்பதாகவும், ஆனால் அதனுடன் உடன்படவில்லை என்றும் பிவிதுரு ஹெல உறுமய தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் பேசுகையில், சந்தேக நபரை விசாரணைக்கு ஒத்துழைக்க வற்புறுத்த முடியாது என்பது உலகளாவிய சட்டக் கோட்பாடு எனவும் கூறினார்.

மேலும், கடவுச்சொற்களை வழங்க வேண்டாம் என்பதற்கு சட்ட உரிமைகள், விசாரணை அழுத்தங்கள், தகவல் வழங்குநர் பாதுகாப்பு மற்றும் வரலாற்று அனுபவங்கள் உள்ளிட்ட காரணங்கள் இருப்பதாகவும் அவர் விளக்கினார்.

இந்நிலையில், இந்த நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சுரேஷ் சலே தரப்பு சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்யலாம் என அவர் எதிர்பார்த்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கை கராத்தே சங்கத்தில் பண மோசடி மற்றும் நிர்வாகம் குறித்து கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

இலங்கை கராத்தே சங்கத்தில் பண மோசடி மற்றும் நிர்வாகம் குறித்து கடும் குற்றச்சாட்டு

July 2, 2026
இனியபாரதிக்கு ஜூலை 8 வரை விளக்கமறியலில்
செய்திகள்

இனியபாரதிக்கு ஜூலை 8 வரை விளக்கமறியலில்

July 2, 2026
திருக்கோவில் பகுதியில் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது
செய்திகள்

திருக்கோவில் பகுதியில் ஐஸ் போதை பொருளுடன் ஒருவர் கைது

July 2, 2026
களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்!
செய்திகள்

களனி பல்கலையின் புதிய வேந்தராக நாரம்பனாவே ஆனந்த தேரர் நியமனம்!

July 2, 2026
கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது

July 2, 2026
134 திரைப்படப் பாடல்களுக்கு தனிப்பட்ட உரிமை கோர முடியாது; இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!
செய்திகள்

134 திரைப்படப் பாடல்களுக்கு தனிப்பட்ட உரிமை கோர முடியாது; இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

July 2, 2026
Next Post
இலங்கை கராத்தே சங்கத்தில் பண மோசடி மற்றும் நிர்வாகம் குறித்து கடும் குற்றச்சாட்டு

இலங்கை கராத்தே சங்கத்தில் பண மோசடி மற்றும் நிர்வாகம் குறித்து கடும் குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.