Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு மட்டு மாநகரசபையில் கண்டனம்

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு மட்டு மாநகரசபையில் கண்டனம்

1 hour ago
in அரசியல், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு மட்டக்களப்பு மாநகரசபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டதுடன் ஜனநாயகத்தினை கேள்விக்குள்ளாக்கும் இவ்வாறான செயற்பாடுகளை அனுமதிக்கமுடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு நேற்றைய தினம் (02) மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது.

சபையின் சம்பிரதாயங்களுக்கு அமைவாக சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் முதல்வரினால் தலைமையுரையுடன் மாநகரசபையின் நிலையற்குழுக்களின் முன்மொழிவுகள் முன்மொழியப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபை மற்றும் கதிர்காம பாதயாத்திரை அன்னதான குழு இணைந்து கதிர்காம காட்டுவழிப்பாதையில் முன்னெடுக்கும் அன்னதான நிகழ்வுகளுக்கான அனுமதி கோரப்பட்ட நிலையில் அதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டன.

இதேபோன்று மட்டக்களப்பு மாநகரசபைக்குள் முன்னெடுக்கப்படும் பல்வேறு திட்டங்கள் மற்றும் மாநகரசபையின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான தேவையான ஏற்பாடுகளுக்கு சபையின் அனுமதிகள் வழங்கப்பட்டன.

அத்துடன் மாநகரசபையின் நிதிக்குழுவினால் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கும் இதன்போது அனுமதிகள் வழங்கப்பட்டதுடன் மாநகரசபையின் செய்ற்பாடுகளை வினைத்திறன் மிக்கதாக கொண்டுசெல்வதற்கு தேவையான ஏற்பாடுகளுக்கும் அனுமதிகள் வழங்கப்பட்டன.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபைக்குள் இனங்காணப்பட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் கருத்துகள் முன்வைக்கப்பட்டதுடன் மாநகரசபையில் பல்வேறு காரசாரமான விவாதங்களும் இடம்பெற்றன.


அத்துடன் பல்வேறு நிதிகள் மூலம் மட்டக்களப்பு மாநகரசபைக்குள் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இங்கு பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்றன.

இதன்போது மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் வீதி மின்விளக்கு பொருத்துதல்,வீதிகளை புனரமைத்தல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

ஆண்மைக்காலமாக டெங்கின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் காண்களை தூயிமைப்படுத்துவது தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன. மழைகாலம் ஆரம்பிக்கும் காலத்திற்கு முதல் இந்த பணிகளை தொடங்கவேண்டும் என்று பெருமளவான உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர். எனினும் நிர்வாக ரீதியாக அது தொடர்பான நடவடிக்கைகள் மந்தகதியில் உள்ளதாகவும் விரைவுபடுத்துமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது வவுனியா மாநகரசபையின் முதல்வர் வடமாகாண ஆளுனரால் பதிவி நீக்கம் செய்யப்பட்டமையானது மாநகரசபைக்கு வாக்களித்த மக்களின் ஜனநாயக உரிமையினை மீறும் செயற்பாடு எனவும் அதனை வன்மையா கண்டிப்பதாக மாநகரசபை உறுப்பினர் தயாளகௌரியினால் தெரிவிக்கப்பட்டது.

இதனை மட்டக்களப்பு மாநகரசபை வன்மையாக கண்டிப்பதாகவும் மக்களின் ஜனநாயக வாக்களிப்பினால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு உறுப்பினராகவும் மாநகரசபை உறுப்பினர்களினால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு முதல்வராகவும் உள்ள நிலையில் அவரை பதவி நீக்கம் செய்வதற்கு வடமாகாண ஆளுனர் முன்னெடுத்த செயற்பாடுகள் ஜனநாயக விரோத செயற்பாடு எனவும் வன்மையாக கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரின் திட்டத்தை தற்போதைய அரசு நடைமுறைப்படுத்துகிறதா?; செ. நிலாந்தன் கேள்வி
செய்திகள்

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரின் திட்டத்தை தற்போதைய அரசு நடைமுறைப்படுத்துகிறதா?; செ. நிலாந்தன் கேள்வி

July 3, 2026
மாகாணசபைத் தேர்தலில் வடக்கு கிழக்கை தவிர ஏனைய அனைத்து மாகாணங்களில் வெற்றி பெறுவோம்; மொட்டு நம்பிக்கை
அரசியல்

மாகாணசபைத் தேர்தலில் வடக்கு கிழக்கை தவிர ஏனைய அனைத்து மாகாணங்களில் வெற்றி பெறுவோம்; மொட்டு நம்பிக்கை

July 3, 2026
மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வதிவிடப் பயிற்சிப்பட்டறை
செய்திகள்

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வதிவிடப் பயிற்சிப்பட்டறை

July 3, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயின் இல்லத்துக்கு சென்று அனுதாபம் தெரிவித்தார் எம்.பி. இரா. சாணக்கியன்!
செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த இளம் தாயின் இல்லத்துக்கு சென்று அனுதாபம் தெரிவித்தார் எம்.பி. இரா. சாணக்கியன்!

July 3, 2026
பிள்ளைகள் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்களா?; வீட்டிலிருந்தே பெற்றோர்கள் கண்டறியும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு கவனம்
செய்திகள்

பிள்ளைகள் போதைப்பொருள் பயன்படுத்துகிறார்களா?; வீட்டிலிருந்தே பெற்றோர்கள் கண்டறியும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த அரசு கவனம்

July 3, 2026
கர்தினாலை ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஆயர்கள் பேரவை அறிக்கை
செய்திகள்

கர்தினாலை ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்திய குற்றச்சாட்டுகளுக்கு ஆயர்கள் பேரவை அறிக்கை

July 3, 2026
Next Post
மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வதிவிடப் பயிற்சிப்பட்டறை

மட்டக்களப்பில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான வதிவிடப் பயிற்சிப்பட்டறை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.