Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மக்கள் அழைத்தால் நாமலை வேட்பாளராகக் களமிறக்குவேன்; மஹிந்த ராஜபக்ஷ

மக்கள் அழைத்தால் நாமலை வேட்பாளராகக் களமிறக்குவேன்; மஹிந்த ராஜபக்ஷ

1 hour ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

மக்கள் கோரிக்கை விடுத்தால் நாமல் ராஜபக்ஷவை அடுத்த கட்டத் தேர்தல்களில் வேட்பாளராகக் களமிறக்கத் தயாராகவுள்ளோம். நான் ஒருபோதும் அரசியலில் இருந்து விடைபெறப் போவதில்லை. பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைத்து எமது கட்சி முன்னோக்கிப் பயணிக்குமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டி, தலதா மாளிகையில் சனிக்கிழமை (04) மத வழிபாடுகளின் ஈடுபட்டதன் பின்னர் ஊகடங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தற்போது மக்கள் எதிர்கொண்டுள்ள நிலைமை மிகவும் கவலைக்குரியதாகும். இதைத் தவிர எமக்குக் கூறுவதற்கு வேறு வார்த்தைகள் எதுவும் இல்லை. இது குறித்து மக்களிடமே கேட்டால் இன்னும் நன்றாகத் தெரிந்துகொள்ளலாம்.

யார் வேண்டுமானாலும் எங்களைக் கைது செய்யட்டும், கைது செய்வதற்கு வேறு யாரும் இல்லாததால் எங்களைத்தான் கைத செய்யப் பார்க்கின்றனர். மக்கள் எப்போதும் எங்களுடன்தான் இருக்கிறார்கள் என்பதுதான் அதற்குக் காரணம். நான் ஒருபோதும் அரசியலில் இருந்து விடைபெறப் போவதில்லை. தொடர்ந்து மக்களுடன் இணைந்து செயற்படப் போகின்றேன்.

இனிவரும் தேர்தல்களில் அந்தந்தக் காலகட்டங்களில் மக்கள் யாரை எதிர்பார்க்கிறார்களோ, அவரையே வேட்பாளராகக் களமிறக்குவோம். மக்கள் கோரிக்கை விடுத்தால், நிச்சயமாக நாமலுக்கு அந்த வாய்ப்பை வழங்குவோம். மக்கள் கோராவிட்டால் அவ்வாறு வழங்க மாட்டோம்.

தற்போதைய ஆட்சியாளர்கள் விவசாயிகளுடன் நெருக்கமாக இல்லை. அவர்கள் விவசாயிகளைப் பற்றி வாய்வார்த்தையாக மட்டுமே பேசுகிறார்களே தவிர, உண்மையில் அவர்களோடு நிற்பதில்லை. அத்துடன், எதிர்காலத்தில் தமது கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் ஒன்றிணைத்துக் கொண்டு பயணிப்போம் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நகுலேஸ்வர சிவ ஆலயத்தில் 4 கிலோகிராம் வெள்ளி திருட்டு
செய்திகள்

நகுலேஸ்வர சிவ ஆலயத்தில் 4 கிலோகிராம் வெள்ளி திருட்டு

July 5, 2026
உயர்தர பரீட்சை மறுமதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடு
செய்திகள்

உயர்தர பரீட்சை மறுமதிப்பீட்டுப் பெறுபேறுகள் வெளியிடு

July 5, 2026
நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை தன்னிச்சையாக மாற்றக்கூடாது
செய்திகள்

நீதியரசர்களின் ஓய்வூதிய வயதெல்லையை தன்னிச்சையாக மாற்றக்கூடாது

July 4, 2026
சட்டவிரோதமான முறையில் கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூவர் கைது!
செய்திகள்

சட்டவிரோதமான முறையில் கழிவு தேயிலையை கொண்டு சென்ற மூவர் கைது!

July 4, 2026
சட்டவிரோத மீன்பிடி ஒழிப்பு நடவடிக்கையில் 27 பேர் கைது; 12 படகுகள் கைப்பற்றல்!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி ஒழிப்பு நடவடிக்கையில் 27 பேர் கைது; 12 படகுகள் கைப்பற்றல்!

July 4, 2026
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!
காணொளிகள்

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு சர்வதேச விசாரணை கோரி மட்டக்களப்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

July 4, 2026
Next Post
நகுலேஸ்வர சிவ ஆலயத்தில் 4 கிலோகிராம் வெள்ளி திருட்டு

நகுலேஸ்வர சிவ ஆலயத்தில் 4 கிலோகிராம் வெள்ளி திருட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.