Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் சிஐடி வாக்குமூலம் பதிவு?

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விநாயகமூர்த்தி முரளிதரனிடம் சிஐடி வாக்குமூலம் பதிவு?

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் போது வெளிப்படுத்தப்பட்ட சில விடயங்கள் குறித்து, முன்னாள் அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) என்பவரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பெற்றுள்ளதாக சகோதர மொழி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியின்படி, பிள்ளையான் தரப்பினருக்கும் அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலேவுக்கும் இடையிலான தொடர்பு மற்றும் கிழக்கு மாகாணத்தில் அவர்கள் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பல தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

பிள்ளையானின் குழுவினருக்கு தங்குமிட வசதிகளை வழங்கியபோது, சுரேஷ் சலேவினால் தொடர்புபடுத்தப்பட்ட நபர்களே அந்த வசதிகளை வழங்கியதாகவும், அதற்கான நிதி வசதிகளும் அவர்களாலேயே வழங்கப்பட்டதாகவும் கருணா அம்மான் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருணா அம்மான் மற்றும் பிள்ளையான் ஆகிய இருவருமே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவளித்து வந்தாலும், அவர்கள் இருவருக்கும் இடையே நீண்டகால பகை இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இதற்கிடையில், பிள்ளையான் தரப்பினரால் பொலன்னறுவை, வெலிக்கந்தை பகுதியில் நடத்தப்பட்ட சித்திரவதை முகாம் தொடர்பிலும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் பலரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுள்ளது. கொழும்பு நகருக்குள் அவர்களின் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்த தரப்பினர் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் குறிப்பிடுகின்றன.

Tags: BatticaloaNewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம்; 20 பேர் காயம்
செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் பதற்றம்; 20 பேர் காயம்

July 5, 2026
பஸ் கட்டணத் திருத்தத்தால் மக்களுக்கு அசௌகரியம்
செய்திகள்

பஸ் கட்டணத் திருத்தத்தால் மக்களுக்கு அசௌகரியம்

July 5, 2026
சாய்ந்தமருதில் திரைப்பட பாணியில் மூவரை கைதுசெய்த பொலிஸ்
செய்திகள்

சாய்ந்தமருதில் திரைப்பட பாணியில் மூவரை கைதுசெய்த பொலிஸ்

July 5, 2026
டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்
செய்திகள்

டெங்கு நுளம்பு பரவும் இடங்களை அறிவிக்க தொலைபேசி இலக்கம் அறிமுகம்

July 5, 2026
கொங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் 473 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

கொங்கோவில் எபோலா வைரஸ் பாதிப்பால் 473 பேர் உயிரிழப்பு

July 5, 2026
பொருளாதார மீட்சிக்காக 4 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளை நீக்க அரசு தீர்மானம்
செய்திகள்

பொருளாதார மீட்சிக்காக 4 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளை நீக்க அரசு தீர்மானம்

July 5, 2026
Next Post
பஸ் கட்டணத் திருத்தத்தால் மக்களுக்கு அசௌகரியம்

பஸ் கட்டணத் திருத்தத்தால் மக்களுக்கு அசௌகரியம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.