Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காணிகளை விடுவிக்கக் கோரி வலிகாமம் வடக்கு மக்கள் 12ஆவது வாரமாகவும் போராட்டம்!

காணிகளை விடுவிக்கக் கோரி வலிகாமம் வடக்கு மக்கள் 12ஆவது வாரமாகவும் போராட்டம்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணம் – வலிகாமம் வடக்கு பகுதியில் உயர் பாதுகாப்பு வலயங்களாகத் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் நேற்று (10) 12ஆவது வாரமாகவும் அமைதியான கவனயீர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

பலாலி மற்றும் மயிலிட்டி பகுதிகளில் அமைந்துள்ள இராணுவத்தின் கொமாண்டோ பங்களாவுக்கு முன்பாக ஒன்று திரண்ட போராட்டக்காரர்கள், தங்களுக்குச் சொந்தமான காணிகளை உடனடியாக மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தினர்.

1990ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அப்பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள், உள்நாட்டு யுத்தம் நிறைவடைந்து பல ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும், இதுவரை தங்களது சொந்த நிலங்களிலும் வீடுகளிலும் மீளக் குடியேற முடியாத நிலை நீடிப்பதாக தெரிவித்தனர்.

சுமார் 650 ஏக்கர் பரப்பளவிலான காணிகள் இன்னும் உயர் பாதுகாப்பு வலயங்களாக உள்ளதாகக் குறிப்பிட்ட அவர்கள், அந்தக் காணிகளை விடுவிக்கக் கோரி பல ஆண்டுகளாக பல்வேறு வடிவிலான போராட்டங்களை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.

காணிகள் முழுமையாக விடுவிக்கப்படும் வரை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இன்றைய போராட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் செ. கஜேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் எஸ். ஸ்ரீகாந்தா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்.

தங்களின் வாழ்வாதாரத்திற்கும் நிரந்தர குடியிருப்பிற்கும் அவசியமான காணிகளை விரைவாக மீள வழங்குமாறு காணி உரிமையாளர்கள் மீண்டும் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு வந்திறங்கியது
செய்திகள்

ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு வந்திறங்கியது

August 25, 2026
சாவகச்சேரி நகரசபை செயலாளர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு
செய்திகள்

சாவகச்சேரி நகரசபை செயலாளர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

August 25, 2026
காணாமல் ஆக்கப்பட்டோர் தின போராட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு
காணொளிகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின போராட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு

August 25, 2026
வறட்சியால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு
செய்திகள்

வறட்சியால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

August 25, 2026
துபாயில் கைதான நிழலுலக தாதா ‘பஸ் லலித்’ இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்
செய்திகள்

துபாயில் கைதான நிழலுலக தாதா ‘பஸ் லலித்’ இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்

August 25, 2026
போதைப்பொருள் சட்டத்தை திருத்த தீர்மானம்
செய்திகள்

போதைப்பொருள் சட்டத்தை திருத்த தீர்மானம்

August 25, 2026
Next Post
அரசியல் தலையீட்டை சுட்டிக்காட்டி கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் இராஜினாமா!

அரசியல் தலையீட்டை சுட்டிக்காட்டி கூட்டுறவுச் சங்க அதிகாரிகள் இராஜினாமா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.