மத்திய கிழக்கில் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மீது ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது.
இருப்பினும், அந்த ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை ஐக்கிய அரபு இராஜ்ஜியம் இடைமறித்துச் சுட்டு வீழ்த்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், நிலவி வரும் அசாதாரண சூழல் காரணமாக கட்டார் மற்றும் பஹ்ரைன் நாடுகள் தங்களின் பாதுகாப்பு எச்சரிக்கைகளை உயர்த்தி உள்ளதுடன், பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்குமாறு அறிவுறுத்தியுள்ளன.
இந்தத் தாக்குதல்கள் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்கத் தளங்களை இலக்காகக் கொண்டே நடத்தப்பட்டுள்ளன.
இதன்படி, ஜோர்டானில் உள்ள பிரின்ஸ் ஹசன் விமானப்படைத் தளத்தை இலக்காகக் கொண்டு ஈரான் பல பெலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.
மேலும், குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள சில அமெரிக்க இராணுவத் தளங்களையும் இலக்காகக் கொண்டு ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.








