Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசிரியரின் காரிற்கு தீவைத்த 8 வயது சிறுவன்; பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்!

ஆசிரியரின் காரிற்கு தீவைத்த 8 வயது சிறுவன்; பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் சொகுசு கார் தீப்பற்றிய சம்பவம் தொடர்பாக 8 வயது சிறுவன் மீது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு ஆதாரம் இல்லை என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சிறுவன் காருக்கு தீ வைத்தார் என்பதை நிரூபிக்கும் எந்தவொரு நேரடி சாட்சியமோ அல்லது தடயவியல் ஆதாரமோ இதுவரை கிடைக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 3ஆம் திகதி, குருணாகலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 14 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குருணாகல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

விசாரணைகளின் போது, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியில் இடம்பெற்றிருந்த சிறுவன், அதே பாடசாலையில் கல்வி பயிலும் 8 வயது மாணவர் என்பதும், சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் அவர் காரின் அருகே சென்றிருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், அந்த சிறுவனே தீ விபத்துக்கு காரணம் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்காததால், அவரை குற்றவாளியாக சித்தரிக்கும் தகவல்களை நம்பவோ பகிரவோ கூடாது என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், தீ விபத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், காரில் தீப்பற்றியதற்கான காரணத்தை அறிவதற்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் நிபுணத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு; இன்று நள்ளிரவு முதல் அமுல்
செய்திகள்

இலங்கையில் பெட்ரோல் விலை குறைப்பு; இன்று நள்ளிரவு முதல் அமுல்

August 30, 2026
இஸ்லாமிய நாடுகளுக்கு மோஜ்தபா கமேனி அழைப்பு
உலக செய்திகள்

இஸ்லாமிய நாடுகளுக்கு மோஜ்தபா கமேனி அழைப்பு

August 30, 2026
புகையிலை இல்லா வெற்றிலை… கலாசாரம் எங்கே? – வஜிர அபேவர்தன
செய்திகள்

புகையிலை இல்லா வெற்றிலை… கலாசாரம் எங்கே? – வஜிர அபேவர்தன

August 30, 2026
பெயர் மாற்ற சர்ச்சை; அரசாங்க தகவலை மறுத்த அர்ஜுன மகேந்திரன்
செய்திகள்

பெயர் மாற்ற சர்ச்சை; அரசாங்க தகவலை மறுத்த அர்ஜுன மகேந்திரன்

August 30, 2026
புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு
செய்திகள்

புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு

August 30, 2026
ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்; மாணவர்களை நாடுகடத்த முயற்சி
உலக செய்திகள்

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்; மாணவர்களை நாடுகடத்த முயற்சி

August 30, 2026
Next Post
பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டு தப்பிய சந்தேகநபர் கைது!

பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டு தப்பிய சந்தேகநபர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.