Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆசிரியரின் காரிற்கு தீவைத்த 8 வயது சிறுவன்; பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்!

ஆசிரியரின் காரிற்கு தீவைத்த 8 வயது சிறுவன்; பொலிஸ் விசாரணையில் வெளியான தகவல்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

குருணாகல் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் சொகுசு கார் தீப்பற்றிய சம்பவம் தொடர்பாக 8 வயது சிறுவன் மீது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்களுக்கு ஆதாரம் இல்லை என இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த சிறுவன் காருக்கு தீ வைத்தார் என்பதை நிரூபிக்கும் எந்தவொரு நேரடி சாட்சியமோ அல்லது தடயவியல் ஆதாரமோ இதுவரை கிடைக்கவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 3ஆம் திகதி, குருணாகலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த சுமார் 14 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து, சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குருணாகல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

விசாரணைகளின் போது, சமூக வலைத்தளங்களில் பரவி வரும் காணொளியில் இடம்பெற்றிருந்த சிறுவன், அதே பாடசாலையில் கல்வி பயிலும் 8 வயது மாணவர் என்பதும், சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் அவர் காரின் அருகே சென்றிருந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும், அந்த சிறுவனே தீ விபத்துக்கு காரணம் என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைக்காததால், அவரை குற்றவாளியாக சித்தரிக்கும் தகவல்களை நம்பவோ பகிரவோ கூடாது என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், தீ விபத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறிய மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், காரில் தீப்பற்றியதற்கான காரணத்தை அறிவதற்காக அரசாங்க இரசாயன பகுப்பாய்வாளரின் நிபுணத்துவ பரிசோதனையும் மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க ‘குறைந்த விலை’ வாய்ப்பை இழக்க நேரிடலாம்; அமைச்சர் நளிந்த
செய்திகள்

எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க ‘குறைந்த விலை’ வாய்ப்பை இழக்க நேரிடலாம்; அமைச்சர் நளிந்த

July 16, 2026
சுகாதார சீர்கேடு; களுவாஞ்சிகுடி உணவகம் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டது!
செய்திகள்

சுகாதார சீர்கேடு; களுவாஞ்சிகுடி உணவகம் நீதிமன்ற உத்தரவின் பேரில் மூடப்பட்டது!

July 16, 2026
தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை அகழ்வுப் பணிகள் நிறைவு!
செய்திகள்

தெற்காசியாவின் மிக நீளமான நீர்ப்பாசன சுரங்கப்பாதை அகழ்வுப் பணிகள் நிறைவு!

July 16, 2026
ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை: அமைதி பேச்சுவார்த்தை இல்லையெனில் தாக்குதல் தீவிரம் என அறிவிப்பு!
உலக செய்திகள்

ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை: அமைதி பேச்சுவார்த்தை இல்லையெனில் தாக்குதல் தீவிரம் என அறிவிப்பு!

July 16, 2026
பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டு தப்பிய சந்தேகநபர் கைது!
செய்திகள்

பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டு தப்பிய சந்தேகநபர் கைது!

July 16, 2026
புகையிலை கலந்த வெற்றிலைப் பாக்கு மீது கடும் கண்காணிப்பு; விற்பனை மற்றும் விநியோகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை
செய்திகள்

புகையிலை கலந்த வெற்றிலைப் பாக்கு மீது கடும் கண்காணிப்பு; விற்பனை மற்றும் விநியோகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை

July 16, 2026
Next Post
பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டு தப்பிய சந்தேகநபர் கைது!

பொலிஸ் அதிகாரியைச் சுட்டுவிட்டு தப்பிய சந்தேகநபர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.