Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 45 ஆண்டுகள் கடூழிய சிறை!

மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 45 ஆண்டுகள் கடூழிய சிறை!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் தனது 14 வயது மகளை பலமுறை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட 47 வயதுடைய தந்தைக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் 45 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இன்று (16) வழங்கப்பட்ட தீர்ப்பில், வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஆனந்தராஜா, பாதிக்கப்பட்டவருக்கு மொத்தம் 12 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும், நீதிமன்றத்திற்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணையின் போது, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்றதாகக் கூறப்பட்ட நான்கு பாலியல் வன்புணர்வு குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட வகையில் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது.

இந்த சம்பவத்தையடுத்து சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார். பின்னர், சட்டமா அதிபர் திணைக்களம் 2022 ஆம் ஆண்டு வவுனியா மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது.

நீதிமன்றம், இரண்டு தனித்தனி வழக்குகளில் நிரூபிக்கப்பட்ட நான்கு குற்றச்சாட்டுகளுக்காக மொத்தம் 45 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்ததுடன், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் தலா 3 இலட்சம் ரூபாய் வீதம் மொத்தம் 12 இலட்சம் ரூபாயை பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக வழங்கவும் உத்தரவிட்டது.

அத்துடன், ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் 25 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தம் ஒரு இலட்சம் ரூபாயை நீதிமன்ற அபராதமாக செலுத்தவும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டத்தரணி ஸ்ரீ. சிவஸ்கந்தஸ்ரீ ஆஜராகினார்.

தீர்ப்பின்போது கருத்து வெளியிட்ட நீதிபதி, பாதுகாப்பளிக்க வேண்டிய தந்தையே இத்தகைய கொடூரமான குற்றத்தை புரிந்துள்ளதால் எந்தவித தளர்வும் வழங்காமல் அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஐஓசி, சினோபெக் பெற்றோல் விலைகளும் குறைப்பு!
செய்திகள்

ஐஓசி, சினோபெக் பெற்றோல் விலைகளும் குறைப்பு!

August 31, 2026
மட்டக்களப்பில் நீர் விநியோகம் 4 மணி நேரம் இடைநிறுத்தம்; வறட்சியால் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் வீழ்ச்சி!
செய்திகள்

மட்டக்களப்பில் நீர் விநியோகம் 4 மணி நேரம் இடைநிறுத்தம்; வறட்சியால் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் வீழ்ச்சி!

August 31, 2026
ஒரு கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது
செய்திகள்

ஒரு கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது

August 31, 2026
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உண்மையறியாமலே உயிரிழப்பது கவலைக்குரியது; ஐ.நா. பிரதிநிதி!
செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உண்மையறியாமலே உயிரிழப்பது கவலைக்குரியது; ஐ.நா. பிரதிநிதி!

August 31, 2026
உடுவில் பிரதேச செயலகத்தில் மின்சாரம் தாக்கி பெண் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!
செய்திகள்

உடுவில் பிரதேச செயலகத்தில் மின்சாரம் தாக்கி பெண் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!

August 31, 2026
மட்டக்களப்பு விவசாயக் குளங்களில் இருந்து குடிநீர் பெறுவதை நிறுத்தக் கோரிக்கை!
செய்திகள்

மட்டக்களப்பு விவசாயக் குளங்களில் இருந்து குடிநீர் பெறுவதை நிறுத்தக் கோரிக்கை!

August 31, 2026
Next Post
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன காலமானார்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன காலமானார்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.