Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் நீர் விநியோகம் 4 மணி நேரம் இடைநிறுத்தம்; வறட்சியால் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் வீழ்ச்சி!

மட்டக்களப்பில் நீர் விநியோகம் 4 மணி நேரம் இடைநிறுத்தம்; வறட்சியால் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் வீழ்ச்சி!

15 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வறட்சியான காலநிலை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளதால், அப்பகுதியில் தினசரி நான்கு மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகத்தை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

இதன்படி, தினமும் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படுவதாக சபையின் தலைவர் ஏ.எம்.பி.சி.டி. பண்டார தெரிவித்துள்ளார்.

எனினும், நாடு முழுவதும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் கீழ் இயங்கும் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வழமைபோன்று செயல்பட்டு வருவதாகவும், அவற்றில் அதிகபட்ச கொள்ளளவில் நீர் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகிக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் நாளொன்றுக்கு சுமார் 28 இலட்சம் கனமீற்றர் நீர் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதில் 23 முதல் 24 சதவீதம் பாரிய நீர்த்தேக்கங்களிலிருந்தும், சுமார் 65 சதவீதம் ஆறுகள் மற்றும் ஓடைகள் உள்ளிட்ட நீர் ஆதாரங்களிலிருந்தும் பெறப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் நாளொன்றுக்கு சுமார் 6 இலட்சம் கனமீற்றர் நீர் களனி கங்கையிலிருந்து பெறப்படுவதாகவும், நாடு முழுவதும் விநியோகிக்கப்படும் நீரில் சுமார் மூன்றில் ஒரு பங்கு களனி கங்கையிலிருந்து பெறப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

வறட்சியான காலநிலையால் மட்டக்களப்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களே தற்போது ஓரளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மொனராகலை மாவட்டத்தின் பிபிலை மற்றும் மெதகம பகுதிகளிலும் நீர் ஆதாரங்களில் ஏற்பட்டுள்ள நீர் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு, நீர் விநியோகத்தை கட்டுப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ஐஓசி, சினோபெக் பெற்றோல் விலைகளும் குறைப்பு!
செய்திகள்

ஐஓசி, சினோபெக் பெற்றோல் விலைகளும் குறைப்பு!

August 31, 2026
ஒரு கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது
செய்திகள்

ஒரு கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது

August 31, 2026
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உண்மையறியாமலே உயிரிழப்பது கவலைக்குரியது; ஐ.நா. பிரதிநிதி!
செய்திகள்

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் உண்மையறியாமலே உயிரிழப்பது கவலைக்குரியது; ஐ.நா. பிரதிநிதி!

August 31, 2026
லாரக் தீவை குறிவைத்த அமெரிக்கா; ஜோர்தானில் பதிலடி கொடுத்த ஈரான்!
மட்டு செய்திகள்

லாரக் தீவை குறிவைத்த அமெரிக்கா; ஜோர்தானில் பதிலடி கொடுத்த ஈரான்!

August 31, 2026
உடுவில் பிரதேச செயலகத்தில் மின்சாரம் தாக்கி பெண் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!
செய்திகள்

உடுவில் பிரதேச செயலகத்தில் மின்சாரம் தாக்கி பெண் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!

August 31, 2026
மட்டக்களப்பு விவசாயக் குளங்களில் இருந்து குடிநீர் பெறுவதை நிறுத்தக் கோரிக்கை!
செய்திகள்

மட்டக்களப்பு விவசாயக் குளங்களில் இருந்து குடிநீர் பெறுவதை நிறுத்தக் கோரிக்கை!

August 31, 2026
Next Post
ஐஓசி, சினோபெக் பெற்றோல் விலைகளும் குறைப்பு!

ஐஓசி, சினோபெக் பெற்றோல் விலைகளும் குறைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.