கோதட்டுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீம்லக்ஸ் மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ஒரு கிலோ 14 கிராம் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் நேற்று (30) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டவர் கோதட்டுவ பகுதியைச் சேர்ந்த 28 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.








