Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; 8 மாதங்களில் 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கை தீவிரம்; 8 மாதங்களில் 2 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

“நாடு முழுவதும் ஒன்றிணைந்த தேசிய நடவடிக்கை” திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஊடக சந்திப்பு இன்று (16) கொழும்பில் நடைபெற்றது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா ஆகியோர் இதில் கலந்துகொண்டு நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து விளக்கமளித்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் அசோக தர்மசேன, முப்படையினர், பொலிஸார் மற்றும் இலங்கை சுங்கத் திணைக்களம் இணைந்து மேற்கொள்ளும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் மூலம் கடந்த 8 மாதங்களில் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டுகளின் பேரில் 230,248 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த நடவடிக்கைகளின் போது எந்தவொரு நிரபராதி நபரும் அநியாயமாக கைது செய்யப்படக் கூடாது என்பதில் பொலிஸ் திணைக்களம் உறுதியாக இருப்பதாகவும், அதற்கான தெளிவான வழிகாட்டுதல்கள் அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.

இதேவேளை, இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா தெரிவிக்கையில், கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் விமான நிலையம் மற்றும் தபால் சேவையை பயன்படுத்தி நாட்டிற்குள் கடத்த முயற்சிக்கப்பட்ட 13 போதைப்பொருள் கடத்தல் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாக கூறினார்.

சிறிய அளவிலான போதைப்பொருட்கள் கூட தபால் மூலம் நாட்டிற்குள் நுழைவது சமூகத்தில் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், அவற்றைத் தடுக்கும் வகையில் சுங்கத் திணைக்களம் தனது கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வீடு மீது தாக்குதல் குற்றச்சாட்டு; பிரதேச சபை உறுப்பினர் பதவி விலகல்!
செய்திகள்

வீடு மீது தாக்குதல் குற்றச்சாட்டு; பிரதேச சபை உறுப்பினர் பதவி விலகல்!

August 31, 2026
கடலில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரில் மூவர் சடலமாக மீட்பு!
செய்திகள்

கடலில் அடித்துச் செல்லப்பட்ட நால்வரில் மூவர் சடலமாக மீட்பு!

August 31, 2026
முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஆணைக்குழுவால் கைது!
செய்திகள்

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இலஞ்ச ஆணைக்குழுவால் கைது!

August 31, 2026
ஐஓசி, சினோபெக் பெற்றோல் விலைகளும் குறைப்பு!
செய்திகள்

ஐஓசி, சினோபெக் பெற்றோல் விலைகளும் குறைப்பு!

August 31, 2026
மட்டக்களப்பில் நீர் விநியோகம் 4 மணி நேரம் இடைநிறுத்தம்; வறட்சியால் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் வீழ்ச்சி!
செய்திகள்

மட்டக்களப்பில் நீர் விநியோகம் 4 மணி நேரம் இடைநிறுத்தம்; வறட்சியால் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் வீழ்ச்சி!

August 31, 2026
ஒரு கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது
செய்திகள்

ஒரு கிலோவுக்கும் அதிகமான ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் ஒருவர் கைது

August 31, 2026
Next Post
வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்; விரைவில் வரவுசெலவுத் திட்டத்தில் இணைக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்!

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டம்; விரைவில் வரவுசெலவுத் திட்டத்தில் இணைக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.