Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மைதான பணியாளர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜ் வழங்கிய 5000 டொலர் இதுவரை கிடைக்கவில்லையாம்!

மைதான பணியாளர்களுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் சிராஜ் வழங்கிய 5000 டொலர் இதுவரை கிடைக்கவில்லையாம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள், விளையாட்டு

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் பணியாற்றிய மைதான பராமரிப்பாளர்களுக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் சிராஜினால் அறிவிக்கப்பட்ட 5000 அமெரிக்க டொலர் இதுவரை கிடைக்கவில்லை என மைதான பராமரிப்பு பொறுப்பாளர் கொட்பிரி தபரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கை தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மைதான பராமரிப்பு ஊழியர்களுக்கு 5000 அமெரிக்க டொலர் வழங்குவது குறித்து, மொஹமட் சிராஜ் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என தெரிவித்தார்.

இவ்வாறான அறிவிப்புக்களினால், தாம் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் சுட்டிக்காட்டினார். மொஹமட் சிராஜ் வெளியிட்ட அறிவிப்பின் பிரகாரம், அந்த தொகை கிடைக்கும் என தன்னால் உறுதியாக கூற முடியாது என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆசிய கிரிக்கெட் பேரவையினால் அறிவிக்கப்பட்ட 50000 அமெரிக்க டொலர் கிடைத்துள்ளதாகவும் இதன்படி, பல்லேகல மைதானத்தில் 120 – 125 பராமரிப்பாளர்கள் உள்ளதாகவும், கொழும்பில் 140 மைதான பராமரிப்பாளர் உள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

இரண்டு மைதானங்களிலும் சேர்த்து மொத்தமான 265 மைதான பராமரிப்பாளர் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்பிரகாரம், நிரந்தர ஊழியர் ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக தொகை கிடைக்கும் என்பதுடன், நாள் கூலி அடிப்படையில் பணியாற்றிய ஒருவருக்கு சுமார் 80,000 ரூபா கிடைக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்

தொடர்புடையசெய்திகள்

பஸ்ஸில் போதைப்பொருளை பாவித்துவிட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டல்; தட்டி கேட்ட நடத்துனர் மீதும் தாக்குதல்
செய்திகள்

பஸ்ஸில் போதைப்பொருளை பாவித்துவிட்டு பெண்ணிடம் பாலியல் சீண்டல்; தட்டி கேட்ட நடத்துனர் மீதும் தாக்குதல்

June 9, 2025
பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து
செய்திகள்

பஸ் ஒன்று முன்னால் சென்ற பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து

June 9, 2025
சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்
செய்திகள்

சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்தவரைக் கைது செய்த பொலிஸார்

June 9, 2025
700 மில்லியன் வரி ஏய்ப்பு ; முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது
செய்திகள்

700 மில்லியன் வரி ஏய்ப்பு ; முன்னாள் இராஜாங்க அமைச்சரின் மனைவி கைது

June 9, 2025
சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்
செய்திகள்

சூடுபிடிக்கும் கைதிகளை விடுவித்த விவகாரம்; சிறைச்சாலைகள் ஆணையாளரை பணி இடைநீக்கம் செய்ய தீர்மானம்

June 9, 2025
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில
செய்திகள்

சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்களின் விபரங்களை வெளியிட்டார் கம்மன்பில

June 9, 2025
Next Post
அச்சுறுத்தும் நிபா வைரஸ்; இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்கும் பணிகள் ஆரம்பம் !

அச்சுறுத்தும் நிபா வைரஸ்; இலங்கைக்குள் நுழைவதைத் தடுக்கும் பணிகள் ஆரம்பம் !

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.