இரத்தினபுரி குருவிட்ட சிறைச்சாலையில் இன்று காலை பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு ஏற்பட்ட அமைதியின்மை அதிகாரிகளின் தலையீட்டின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. இருப்பினும், இன்று காலை மீண்டும் சில கைதிகள் பதற்றத்தை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவத்தின் போது, சிறைச்சாலையின் வைத்தியசாலை கட்டடத்திற்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிஸார் கண்ணீர்புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதனிடையே, கலவரத்தின் போது காயமடைந்த நான்கு கைதிகள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகளின் பதில் ஆணையர் நாயகம் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், பாதுகாப்பு நடவடிக்கைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.








