சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக உபவேந்தர் வெளியிட்ட அறிவிப்பில், கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, விடுதிகளில் தங்கியிருந்து கல்வி பயிலும் மாணவர்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (9) முதல் தங்களது விடுதிகளுக்கு மீண்டும் திரும்ப முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.








