களுத்துறை மாவட்டம், புலத்சிங்கள உடுகலகந்த அமரகெதர பகுதியில் இடம்பெற்ற வேன் விபத்தில் 14 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (7) காலை இடம்பெற்ற இந்த விபத்தில், தொழிற்சாலை ஒன்றிற்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்களில் 6 பேர் ஹொரணை மாவட்ட வைத்தியசாலையிலும், மேலும் 8 பேர் புலத்சிங்கள பிரதேச வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 12 பேர் பெண்கள் எனவும், வேன் சாரதி உள்ளிட்ட இரு ஆண்களும் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காயமடைந்த எவரினதும் நிலைமை ஆபத்தான நிலையில் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புலத்சிங்கள பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








