Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை கடற்படையால் 9 தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசு தலையிட முதல்வர் விஜய் கோரிக்கை!

இலங்கை கடற்படையால் 9 தமிழக மீனவர்கள் கைது; மத்திய அரசு தலையிட முதல்வர் விஜய் கோரிக்கை!

2 hours ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படும் தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது இந்திய மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அவர்களின் விசைப்படகையும் பறிமுதல் செய்துள்ள சம்பவம் தொடர்பில் மத்திய அரசு உடனடியாகத் தூதரக ரீதியில் தலையிட வேண்டும் என தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு வியாழக்கிழமை (13) கடிதம் அனுப்பியுள்ள முதல்வர் விஜய், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட படகையும் விரைவில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த மீனவர்கள் ஆகஸ்ட் 12ஆம் திகதி இரவு இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக மீன்பிடித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும். தற்போதைய நிலவரப்படி, 49 இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனிடையே, ராமேஸ்வரம் பகுதி மீனவ சமூகத்தினர் தொடர்ந்து இடம்பெறும் கைது நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதுடன், உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஒன்றரை மாதங்களில் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட மூன்றாவது படகு இதுவென சேவியர் மீனவர் சங்கத் தலைவர் சகாயம் சேவியர் தெரிவித்துள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட படகு வெலிங்டன் என்ற உள்ளூர் மீனவருக்குச் சொந்தமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து இயங்கும் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில், ஆகஸ்ட் 12ஆம் திகதி 300-க்கும் சற்று அதிகமான படகுகளே கடலுக்குச் சென்றதாக உள்ளூர் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படலாம் என்ற தொடர்ச்சியான அச்சமே இதற்குக் காரணம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன!
செய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 8 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டன!

August 14, 2026
புலத்சிங்கலவில் இரு இளைஞர்களுக்கு தீ வைப்பு; தம்பதி உள்ளிட்ட மூவர் கைது!
செய்திகள்

புலத்சிங்கலவில் இரு இளைஞர்களுக்கு தீ வைப்பு; தம்பதி உள்ளிட்ட மூவர் கைது!

August 14, 2026
16 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை!
செய்திகள்

16 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை!

August 14, 2026
5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் அழிப்பு!
செய்திகள்

5,200 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருட்கள் அழிப்பு!

August 14, 2026
A/L வினாத்தாள் கசிவு இல்லை; பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும்!
செய்திகள்

A/L வினாத்தாள் கசிவு இல்லை; பரீட்சை திட்டமிட்டபடி நடைபெறும்!

August 14, 2026
மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக நடப்பட்ட தொல்பொருள் திணைக்கள பலகை
செய்திகள்

மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தில் இரவோடு இரவாக நடப்பட்ட தொல்பொருள் திணைக்கள பலகை

August 14, 2026
Next Post
16 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை!

16 ஆண்டுகளுக்குப் பிறகு அமெரிக்காவில் ஒரே நாளில் 3 பேருக்கு மரண தண்டனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.