அமெரிக்காவில் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
டென்னசி, அலபாமா மற்றும் ஓக்லஹோமா ஆகிய மூன்று மாகாணங்களில் இந்த மரண தண்டனைகள் தனித்தனியாக நிறைவேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டல் ஊழியரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 66 வயதான என்டனி டேரல், தனது காதலியை சுட்டுக்கொன்றதாக குற்றம் நிரூபிக்கப்பட்ட 70 வயதான கார்லோஸ் மற்றும் 5 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 42 வயதான ஜெரமி வில்லியம்ஸ் ஆகியோருக்கே மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
மூவருக்கும் ஊசி மூலம் விஷம் செலுத்தும் முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதற்கு முன்னர் 2010 ஜனவரி 7ஆம் திகதி ஒரே நாளில் மூன்று பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் சுமார் 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் மூன்று கைதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.








