உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை 67 ஆக உயர்த்துவதற்கு அரசியலமைப்புத் திருத்தம் மேற்கொள்ளப்படுமாயின், அனைத்து அரசு மற்றும் அரை அரசுத் துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதையும் 67 ஆக உயர்த்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்வல்லுநர்களின் தேசிய பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பான தீர்மானம் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்வல்லுநர்களின் தேசிய பேரவையினால் நேற்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
சுமார் 15 இலட்சம் அரச ஊழியர்களில் குறிப்பிட்ட ஒரு சேவைப் பிரிவினருக்கு மாத்திரம் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது அரசியலமைப்புக்கு முரணானதாக அமையக்கூடும் என பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
அனைத்து அரசு மற்றும் அரை அரசுத் துறை ஊழியர்களுக்கும் சமமான முறையில் ஓய்வுபெறும் வயது 67 ஆக நிர்ணயிக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையை உள்ளடக்கிய யோசனையில் உலப்பனே சுமங்கல தேரர், சமன் ரத்னப்பிரிய, ரவி குமுதேஷ், ஆனந்த பாலித, உதேனி திசாநாயக, சிந்தக்க பண்டார, பந்துல சமன் குமார, சுபுன் களுகோட்டகே, கயாமல் சுமனரத்ன, சுமேத சோமரத்ன மற்றும் சுபாஷ் கருணாரத்ன ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.
இதேவேளை, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பில் தற்போது பல்வேறு தரப்பினரிடையே கருத்து முரண்பாடுகள் மற்றும் கடுமையான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.








