கண்டி எசல பெரஹெராவின் முதல் கும்பல் பெரஹெரா இன்று (18) வீதிகளில் வலம் வரவுள்ள நிலையில், பெரஹெரா நிறைவடையும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை கண்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கலால் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைய, கண்டி கடவத்த சதாரா மற்றும் கங்காவத்த கோரள பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட அனைத்து மதுக்கடைகளும் இக்காலப்பகுதியில் மூடப்படும்.
அத்துடன், குண்டசாலை பிரதேச செயலகப் பிரிவின் நத்தாரம்போத்த கிராம அலுவலர் பிரிவில், பிரதான வீதியை அண்மித்த எரிபொருள் நிலையம் வரையிலான அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.








