Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
3,000 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படும் பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!

3,000 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படும் பானை ஓடுகள் கண்டுபிடிப்பு!

2 hours ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

திருநெல்வேலி அருகே தொல்லியல் மாணவர்கள் மேற்கொண்ட கள ஆய்வின்போது, சுமார் 3,000 ஆண்டுகள் பழமையானதாகக் கூறப்படும் பானை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை மாணவ, மாணவிகள், தொல்லியல் துறைத் தலைவர் சுதாகர் தலைமையில் நேற்று (20) பல்வேறு வரலாற்று மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

மருதூர் அணைக்கட்டு, சீவலப்பேரி, மறுகால்தலை பகுதியில் அமைந்துள்ள பழமையான கல்வெட்டு, உழக்குடி அருகேயுள்ள நெடுங்கல், நாட்டார்குளம் நடுகல், ஆதிச்சநல்லூர் மற்றும் கிருஷ்ணாபுரம் வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆய்வு இடம்பெற்றுள்ளது.

உழக்குடி அருகே அமைந்துள்ள சுமார் 3,000 ஆண்டுகள் பழமையான நெடுங்கல்லை மாணவர்கள் பார்வையிட்டபோது, அதன் அருகில் மாணவர் லட்சுமணன் பானை ஓடு ஒன்றைக் கண்டெடுத்துள்ளார்.

அந்தப் பானை ஓட்டில் அந்துப்பூச்சியை ஒத்த உருவம் புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே பகுதியில் மாணவி பிரியா, கலைநுட்ப வேலைப்பாடுகளைக் கொண்ட பானை மூடியின் உடைந்த பகுதியொன்றையும் கண்டெடுத்துள்ளார்.

இந்த இரண்டு தொல்லியல் பொருட்களும் 3,000 ஆண்டுகளுக்கு முற்பட்டவையாக இருக்கக்கூடும் என தொல்லியல் உதவிப் பேராசிரியர் மதிவாணன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கள ஆய்வில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை பல்கலைக்கழகத் துணைவேந்தர் சந்திரசேகர் பாராட்டியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!
செய்திகள்

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

August 21, 2026
டிப்பருடன், உழவு இயந்திரம் மோதி விபத்து; ஐவர் பலி!
செய்திகள்

டிப்பருடன், உழவு இயந்திரம் மோதி விபத்து; ஐவர் பலி!

August 21, 2026
டெங்கு கட்டுப்பாட்டில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்க புதிய முன்னோடித் திட்டம்!
செய்திகள்

டெங்கு கட்டுப்பாட்டில் பொதுமக்களின் பங்களிப்பை அதிகரிக்க புதிய முன்னோடித் திட்டம்!

August 20, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு!
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மீண்டும் உயர்வு!

August 20, 2026
புற்றுநோய் மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு வாரத்தில் தீர்வு; அமைச்சர் உறுதி
செய்திகள்

புற்றுநோய் மருந்து தட்டுப்பாட்டுக்கு ஒரு வாரத்தில் தீர்வு; அமைச்சர் உறுதி

August 20, 2026
பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான சட்டத் திருத்தம் நிறைவேற்றம்!
செய்திகள்

பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான சட்டத் திருத்தம் நிறைவேற்றம்!

August 20, 2026
Next Post
பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

பொலிஸ் தடையகற்றல் சான்றிதழ் வழங்கும் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.