மூத்த இசைக்கலைஞர் நந்தா மாலினியின் மறைவை முன்னிட்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மூன்று நாள் தேசிய துக்க காலத்தில், அனைத்து அரச நிறுவனங்களிலும் தேசியக் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
இதன்படி, இன்று (21), நாளை (22) மற்றும் நாளை மறுதினம் (23) ஆகிய மூன்று தினங்களிலும் அரச நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படவுள்ளது.
இது தொடர்பான அறிவுறுத்தல் 04/2026 ஆம் இலக்க உள்நாட்டலுவல்கள் சுற்றறிக்கை மூலம் அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அரசாங்க அதிபர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
2026 ஆகஸ்ட் 21ஆம் திகதி வெளியிடப்பட்ட குறித்த சுற்றறிக்கையில், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் எஸ். அலோக பண்டார கையொப்பமிட்டுள்ளார்.
இதேவேளை, நந்தா மாலினியின் மறைவை முன்னிட்டு ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23ஆம் திகதிகளை தேசிய துக்க தினங்களாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.
இலங்கையின் புகழ்பெற்ற பாடகியான நந்தா மாலினி தனது 82ஆவது வயதில் நேற்று (20) நாவலையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.








