மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் தரணிராஜ் மற்றும் அவரது சகோதரர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆலயத்தில் நடைபெற்று வரும் திருவிழாவின்போது ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தைத் தொடர்ந்து நேற்று (20) இரவு இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கான காரணம் மற்றும் சம்பவத்தில் தொடர்புடையவர்கள் குறித்து மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








