அரசமைப்பின் 22ஆவது திருத்தச்சட்டமூலத்தை முன்னெடுப்பதைவிட, தற்போதைய அரசாங்கம் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கு முதலில் தீர்வு காண வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மக்கள் உணவுக்கே சிரமப்படும் நிலையில், அவர்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் தேவையற்ற விடயங்களை முன்னெடுப்பது மேலும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மக்களுக்காக செய்ய வேண்டிய பணிகளை நிறைவேற்றிய பின்னர், அரசமைப்பில் தேவையான எந்தவொரு திருத்தத்தையும் மேற்கொள்ளலாம் எனவும் மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.








