சீன அரசாங்கத்தின் உதவியின் கீழ் கொட்டாவ பகுதியில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள கலைஞர்களுக்கான மானிய அடிப்படையிலான வீட்டுத்திட்டத்தில் பயன்பெறுவதற்காக, நாடு முழுவதும் உள்ள கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை சம்பந்தப்பட்ட இணைப்பின் ஊடாக பதிவிறக்கம் செய்து, உரிய முறையில் பூர்த்தி செய்ய வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கலைஞர் தொடர்பாடல் பிரிவில் நேரடியாக ஒப்படைக்கலாம். அல்லது பதிவுத் தபால் மூலம் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

கலாசார பணிப்பாளர்,
கலாசார அலுவல்கள் திணைக்களம்,
8ஆம் மாடி, செத்சிறிபாய,
பத்தரமுல்ல.
விண்ணப்பங்கள் அடங்கிய கடித உறையின் மேல் இடது மூலையில் “சீன உதவியின் கீழ் நிர்மாணிக்கப்படும் கலைஞர்களுக்கான வீட்டுத்திட்டம்” என குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி: 2026 ஓகஸ்ட் 25.
தகுதியுடைய கலைஞர்கள் காலக்கெடுவுக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
https://www.culturaldept.gov.lk/index.php?lang=en#secondPage








