Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தற்போதைய அரசின் கிரான் பாலம் மற்றும் வீதி புனரமைப்பு பணிகள் தரமற்றவை; புதிதாக நியமனம் பெற்ற மொட்டு அமைப்பாளர்

தற்போதைய அரசின் கிரான் பாலம் மற்றும் வீதி புனரமைப்பு பணிகள் தரமற்றவை; புதிதாக நியமனம் பெற்ற மொட்டு அமைப்பாளர்

45 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

​ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால், மட்டக்களப்பு மாவட்டத்திற்கான கட்சியின் புதிய அமைப்பாளராக தெய்வேந்திரராசா புலேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

​இந்நியமனத்தைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாவட்டத்தின் எதிர்கால அரசியல் செயற்பாடுகள், அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்து தெளிவுபடுத்தும் ஊடகச் சந்திப்பொன்று நேற்று (23) ஞாயிற்றுக்கிழமை வொய்ஸ் ஒப் மீடியாவில் நடைபெற்றது.

​ஊடகச் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைப்பாளர் தெய்வேந்திரராசா புலேந்திரன், மட்டக்களப்பு – கிரான் பாலம் மற்றும் தற்போதைய அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வீதிப் புனரமைப்புப் பணிகள் மிகவும் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டு வருவதாகக் குற்றம்சாட்டினார். மழைக்காலங்களில் பொதுமக்கள் இதனால் சந்திக்கும் இன்னல்களையும் பாதிப்புகளையும் தவிர்க்கும் வகையில், உறுதியான மற்றும் நிலையான உட்கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

​மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் பட்டதாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக்கொடுப்பதே தனது முதன்மை இலக்காகும் என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

​முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வீதிப் புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்புத் திட்டங்களை நினைவுகூர்ந்த ஆதரவாளர்கள், புதிய அமைப்பாளரின் நியமனத்தை வரவேற்பதாக இதன்போது தெரிவித்தார்.

​மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் ஆகிய மூவின மக்களின் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வுகண்டு, இளைஞர் மற்றும் யுவதிகளுக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க புதிய அமைப்பாளருடன் இணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படத் தயாராக இருப்பதாக கட்சியின் மாவட்ட ஆலோசகர் ராஜன் மயில்வாகனம் இதன் போது தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கான ‘Voice to Policy’ கலந்துரையாடல்; ஓகஸ்ட் 29ஆம் திகதி
செய்திகள்

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கான ‘Voice to Policy’ கலந்துரையாடல்; ஓகஸ்ட் 29ஆம் திகதி

August 24, 2026
பாரதீப் துறைமுகம் அருகே சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது; 22 பேர் மாயம்!
உலக செய்திகள்

பாரதீப் துறைமுகம் அருகே சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது; 22 பேர் மாயம்!

August 24, 2026
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது
செய்திகள்

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது

August 24, 2026
போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கோடிக்கணக்கான பணப்பரிமாற்றம்; வங்கி அதிகாரிகளுக்கு வலை!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல்காரர்களின் கோடிக்கணக்கான பணப்பரிமாற்றம்; வங்கி அதிகாரிகளுக்கு வலை!

August 24, 2026
18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி. சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை!
செய்திகள்

18 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி. சமிந்த விஜேசிறி பிணையில் விடுதலை!

August 24, 2026
இலங்கைக்கு அடுத்தடுத்து அழைத்துவரப்படும் ஆபத்தான நபர்கள்; பல கொலைகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள்!
செய்திகள்

இலங்கைக்கு அடுத்தடுத்து அழைத்துவரப்படும் ஆபத்தான நபர்கள்; பல கொலைகள் தொடர்பில் அதிர்ச்சி தகவல்கள்!

August 24, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.