சாவகச்சேரி நகரசபையின் செயலாளர், சபைக்குச் சொந்தமான முச்சக்கரவண்டியை தனிப்பட்ட போக்குவரத்துக்காக பயன்படுத்தி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
சபையின் அனுமதியுடன் வாகனத்தைப் பயன்படுத்தலாம் என தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், உள்ளூராட்சி ஆணையாளரின் அனுமதி பெறப்படவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
மேலும், சாவகச்சேரியிலிருந்து உரும்பிராய் வரை தினமும் சுமார் 80 கிலோமீற்றர் வாகனம் பயணித்துள்ளதாகவும், போக்குவரத்து பதிவேடுகளில் உண்மையான பயணங்கள் பதிவு செய்யப்படாமல் வேறு இடங்களுக்குச் சென்றதாக பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், நகரசபை வாகனம் அதிகார துஷ்பிரயோகமாக தனிப்பட்ட தேவைக்குப் பயன்படுத்தப்பட்டதா என்ற கேள்வி எழுந்துள்ளது.








