Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொத்துவில் வரையிலான பல கடற்பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை

பொத்துவில் வரையிலான பல கடற்பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை

27 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான பல கடற்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் “அம்பர்” எச்சரிக்கையை விடுத்துள்ளது.

முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடான சிலாபம் வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

புத்தளம் முதல் கொழும்பு, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் அலைகளின் உயரம் தோராயமாக 2.0-2.5 மீட்டராக அதிகரிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடற்படையினரும் மீன்பிடி சமூகத்தினரும் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்நிலையில் நாட்டில் தற்போது நிலவும் எல் நினோ வானிலை தாக்கம் காரணமாக எதிர்வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் சராசரியை விட அதிகமான மழைப்பொழிவு ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வுத் திணைக்களம் எச்சரித்துள்ளது.

இதனால் நீர்த்தேக்கங்கள் வேகமாக நிரம்பி, சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.

அடுத்த ஆறு மாதங்களுக்கான வானிலை தரவுகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் இந்த நிலைமை எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக நாட்டின் வருடாந்த மழைப்பொழிவில் சுமார் 30 சதவீதம் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பதிவாகும் நிலையில், இம்முறை வழக்கத்தை விட அதிகமான மழைப்பொழிவு ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், அதிக மழைப்பொழிவு ஏற்படும் என்பதற்காக அனைத்து பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என அர்த்தமில்லை என்றும், சாத்தியமான நிலைமைகளை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்றும் அஜித் விஜேமன்ன தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் எல் நினோ நிகழ்வின் தாக்கம் மேலும் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தண்ணீர் என நினைத்து ஹைட்ரஜன் இரசாயனத்தை குடித்த சிறுமிக்கு நடந்த துயரம்
செய்திகள்

தண்ணீர் என நினைத்து ஹைட்ரஜன் இரசாயனத்தை குடித்த சிறுமிக்கு நடந்த துயரம்

August 25, 2026
ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு வந்திறங்கியது
செய்திகள்

ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு வந்திறங்கியது

August 25, 2026
சாவகச்சேரி நகரசபை செயலாளர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு
செய்திகள்

சாவகச்சேரி நகரசபை செயலாளர் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டு

August 25, 2026
காணாமல் ஆக்கப்பட்டோர் தின போராட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு
காணொளிகள்

காணாமல் ஆக்கப்பட்டோர் தின போராட்டத்திற்கு அனைவருக்கும் அழைப்பு

August 25, 2026
வறட்சியால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு
செய்திகள்

வறட்சியால் பயிர் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

August 25, 2026
துபாயில் கைதான நிழலுலக தாதா ‘பஸ் லலித்’ இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்
செய்திகள்

துபாயில் கைதான நிழலுலக தாதா ‘பஸ் லலித்’ இலங்கைக்கு கொண்டுவரப்பட்டார்

August 25, 2026
Next Post
தண்ணீர் என நினைத்து ஹைட்ரஜன் இரசாயனத்தை குடித்த சிறுமிக்கு நடந்த துயரம்

தண்ணீர் என நினைத்து ஹைட்ரஜன் இரசாயனத்தை குடித்த சிறுமிக்கு நடந்த துயரம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.