இலங்கை அரசாங்கத்தின் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கையில்லாததால், தங்களது போராட்டத்தை சர்வதேச பொறிமுறையை நோக்கி நகர்த்தி வருவதாக அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத் தலைவி தம்பிராசா செல்வராணி தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு ஆதரவு கோரும் கலந்துரையாடல் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பு காரைதீவில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த செல்வராணி, 17 ஆண்டுகளாக உண்மை மற்றும் நீதிக்காக போராடியும் தீர்வு கிடைக்காததால் சர்வதேச பொறிமுறையை நாடியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் நினைவுகளைப் பகிரும் கண்காட்சி மற்றும் உயிரிழந்த தாய்மார்களை கௌரவிக்கும் நிகழ்வுகளும் 30ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளதாகத் தெரிவித்தார்.








