மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல் நிலைமை காரணமாக தாமதமடைந்திருந்த 10,000 ரயில் தண்டவாளங்களைக் கொண்ட ஒரு தொகுதி, கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதுடன், தற்போது அவை இறக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தற்போது வேகக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள கடலோர ரயில் பாதையின் சில பகுதிகளை புனரமைப்பதற்காக, இந்த தண்டவாளங்களில் சுமார் 5,000 தண்டவாளங்கள் பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்பு கோட்டை முதல் பாணந்துறை வரை உள்ள சுமார் 50 இடங்களில் ரயில் தண்டவாளங்களை மாற்றுவதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த புனரமைப்புப் பணிகள் நிறைவடைய சுமார் ஆறு மாதங்கள் ஆகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ரயில் தண்டவாளங்களை கொள்வனவு செய்வதற்காக உள்நாட்டு நிதியிலிருந்து சுமார் 2,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தண்டவாளப் புனரமைப்புப் பணிகளுடன் இணைந்து, ரயில் பாலங்களின் கட்டுமானம் மற்றும் புனரமைப்புப் பணிகளையும் மேற்கொள்வதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இப்பணிகள் நிறைவடைந்தவுடன், கடலோர ரயில் பாதையில் இயக்கப்படும் ரயில்களின் தினசரி தாமதங்கள் கணிசமாகக் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.







