Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நேபாளத்தை உலுக்கிய திடீர் வெள்ளம்; காரணம் குறித்து புதிய தகவல்!

நேபாளத்தை உலுக்கிய திடீர் வெள்ளம்; காரணம் குறித்து புதிய தகவல்!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நேபாளத்தில் பெரும் உயிரிழப்புகளையும் அழிவையும் ஏற்படுத்திய திடீர் வெள்ளத்திற்கான காரணம் தொடர்பில் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது.

ஆரம்பத்தில், நேபாள–சீன எல்லைப் பகுதியில் பனியாறு ஒன்று நிலநடுக்கத்தால் சரிந்து, திபெத்தில் உள்ள லெண்டேகோலா ஆற்றில் விழுந்ததன் காரணமாகவே திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், மேற்கொள்ளப்பட்ட மேலதிக ஆய்வுகளின் அடிப்படையில், நிலநடுக்கம் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகத் தெரியவில்லை என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பனியாறு சரிந்ததன் விளைவாக ஏற்பட்ட பாரிய நிலச்சரிவே ஆற்றின் நீர்மட்டம் திடீரென உயர்வதற்கு காரணமாகி, பெரும் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாள–சீன திபெத் எல்லைப் பகுதிகளில் நேற்று காலை சுமார் 8.30 மணியளவில் ஏற்பட்ட இந்த திடீர் வெள்ளம் பல பகுதிகளில் பாரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 170-க்கும் மேற்பட்டோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

வெள்ளப்பெருக்குடன் அதிகளவிலான மண் மற்றும் பாறைகளும் அடித்துச் செல்லப்பட்டதால், பல கிராமங்கள் சேற்றில் மூழ்கியுள்ளன. வீடுகள், வீதிகள் மற்றும் பாலங்கள் உள்ளிட்ட பல கட்டமைப்புகளும் சேதமடைந்துள்ளன.

சிட்வான் மாவட்டம் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், நுவாகோட், தாடிங், கோர்கா, தனாஹுன் மற்றும் நவல்பூர் உள்ளிட்ட பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க சேதங்கள் பதிவாகியுள்ளன.

இதனிடையே, காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளும், வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு
காணொளிகள்

ஏறாவூர் காட்டுமாஞ்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தீமிதிப்பு

August 27, 2026
அர்ஜுன மகேந்திரன் பெயரை மாற்றியதால் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சிக்கல்; ஆனந்த விஜேபால
செய்திகள்

அர்ஜுன மகேந்திரன் பெயரை மாற்றியதால் அவரை நாட்டிற்கு அழைத்து வருவதில் சிக்கல்; ஆனந்த விஜேபால

August 27, 2026
மட்டக்களப்பில் ரோட்டராக்ட் கிராண்ட் ஸ்மாஷ் டென்னிஸ் போட்டி ஆரம்பம்
செய்திகள்

மட்டக்களப்பில் ரோட்டராக்ட் கிராண்ட் ஸ்மாஷ் டென்னிஸ் போட்டி ஆரம்பம்

August 27, 2026
குடிநீரை நிர்ணய விலையை விட அதிகமாக விற்ற உணவகம்; ரூ.9.5 இலட்சம் அபராதம்!
செய்திகள்

குடிநீரை நிர்ணய விலையை விட அதிகமாக விற்ற உணவகம்; ரூ.9.5 இலட்சம் அபராதம்!

August 27, 2026
கெப்பித்திகொல்லாவ பகுதியில் கோர விபத்து; கைக்குழந்தை உட்பட மூவர் பலி!
செய்திகள்

கெப்பித்திகொல்லாவ பகுதியில் கோர விபத்து; கைக்குழந்தை உட்பட மூவர் பலி!

August 27, 2026
கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!
செய்திகள்

கூரை சூரிய மின் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்த அறிவிப்பு!

August 27, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.