நாட்டின் பல நிர்வாக மாவட்டங்களில் பொது ஒழுங்கைப் பேணுவதற்காக முப்படையினரையும் அழைக்க ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க உத்தரவிட்டுள்ளார்.
பொதுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் 12ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது ஆகஸ்ட் 27ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
இதன்படி, பொது ஒழுங்கைப் பேணுவதற்காக இலங்கை இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையைச் சேர்ந்த உறுப்பினர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
இந்த உத்தரவு கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, குருநாகல், புத்தளம், அனுராதபுரம், பொலன்னறுவை, பதுளை, மொனராகலை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய 25 நிர்வாக மாவட்டங்களுக்கும் பொருந்தும்.
மேலும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களை அண்மித்துள்ள உள்ளூர் கடற்பரப்புகளும் இந்த உத்தரவின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதியினால் ஆகஸ்ட் 25, 2026 அன்று பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு, ஆகஸ்ட் 27 முதல் அமுலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.







