Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மற்றுமொரு அசம்பாவித்தம் தொடர்பில் நேபாளத்திற்கு எச்சரிக்கை விடுத்த சீனா

மற்றுமொரு அசம்பாவித்தம் தொடர்பில் நேபாளத்திற்கு எச்சரிக்கை விடுத்த சீனா

27 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நேபாளத்தில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது உருவாகி உள்ள ஏரியில் சுமார் 25 இலட்சம் கனமீற்றர் நீர் தேங்கியுள்ளதாக சீன அரச ஊடகம் தெரிவித்துள்ளது.

இந்த வார இறுதி வரை மேலும் சுமார் 30 இலட்சம் கனமீற்றர் நீர் ஏரிக்குள் வரக்கூடும் என்பதால், ஏரி உடையும் அபாயம் அதிகமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Chhochen Khola மற்றும் Purepu Tsangpo ஆகிய ஆறுகள் சங்கமிக்கும் பகுதியில் உருவான இந்த ஏரி ஏற்கனவே கரைபுரண்டு வழியத் தொடங்கியுள்ளதாக சீன நீர்வள அமைச்சு தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் தொடர்ச்சியாக கடும் மழையும் பெய்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் மற்றும் வானிலை நிலைமைகளை கண்காணிப்பதற்காக பொறியியல் குழுக்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளன.

புதிய வெள்ளம் அல்லது மண் குப்பைகள் அடங்கிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காரணமாக, நேபாள – திபெத் எல்லைக்கு அருகிலான தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

இதனிடையே, நேபாள அதிகாரிகள் Bhote Koshi மற்றும் Trishuli ஆறுகளில் அடைப்புகள் ஏற்பட்டு மீண்டும் வெள்ளம் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரித்து, மறு அறிவிப்பு வரும் வரை மக்கள் ஆற்றுப் பகுதிகளிலிருந்து விலகியிருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பேரழிவுக்கு Langtang Lirung மலைப்பகுதியில் பனிப்பாறையின் ஒரு பகுதி ஆற்றுக்குள் சரிந்து விழுந்ததே காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதனால் நீர் மற்றும் குப்பைகள் பெரும் வேகத்தில் கீழ்நோக்கி அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. நேபாளத்தில் பல நூறு பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

திபெத் பகுதியில் மட்டும் 550க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களில் கிட்டத்தட்ட அரைவாசிபேர் வெளிநாட்டவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“நல்லவேளை அநுர ஜனாதிபதியாக இருக்கிறார்”; லம்போகினி விவகாரத்தில் நாமல் ராஜபக்ஷ நகைச்சுவை!
செய்திகள்

“நல்லவேளை அநுர ஜனாதிபதியாக இருக்கிறார்”; லம்போகினி விவகாரத்தில் நாமல் ராஜபக்ஷ நகைச்சுவை!

August 28, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.77 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்; இரு சீனப் பெண்கள் கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.77 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்; இரு சீனப் பெண்கள் கைது!

August 28, 2026
மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை; ஜனாதிபதி அறிவிப்பு!
செய்திகள்

மத்திய மலைநாட்டைப் பாதுகாக்க புதிய அதிகாரசபை; ஜனாதிபதி அறிவிப்பு!

August 28, 2026
நேபாளம் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் நகைகளை கொள்ளையிடும் மனிதர்கள்
உலக செய்திகள்

நேபாளம் அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களின் நகைகளை கொள்ளையிடும் மனிதர்கள்

August 28, 2026
இந்திய பிரதமர் போட்டியில் விஜய்? கருத்துக்கணிப்பில் 9.2% ஆதரவு!
செய்திகள்

இந்திய பிரதமர் போட்டியில் விஜய்? கருத்துக்கணிப்பில் 9.2% ஆதரவு!

August 28, 2026
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடு!
செய்திகள்

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாடு!

August 28, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.