சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையொட்டி யாழில் நடைபெறவுள்ள சர்வதேச மாநாட்டுக்கு எதிராக சில சக்திகள் இன்னுமொரு போராட்டத்தினை நடத்துவதின் மூலமாக அதனுடைய தார்ப்பரியத்தையும் அதனுடைய ஒரு முன்னேற்றத்தையும் அதனுடைய வலுவையும் குறைப்பதற்கான சில வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருப்பதாக நாங்கள் அறிகின்றோம். எனவே அவைகள் தவிர்க்கப்பட வேண்டும், நிறுத்தப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் சபாரெத்தினம் சிவயோகநாதன் தெரிவித்தார்.
மட்டு ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இந்த ஊடக சந்திப்பில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டனர். இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
எதிர்வரும் ஓகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும். அன்றைய தினத்தில் வடகிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கமானது யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் அன்றைய தினத்தினை ஒரு சர்வதேச மாநாடாக நடத்துவதற்கு ஏற்பாடு செய்து செய்துள்ளார்கள்.
எனவே அன்றைய தினத்தில் நடைபெற இருக்கின்ற அந்த மாநாட்டில், தமிழ் பேசும் மக்களாக, தமிழர்களாக நாங்கள் அன்றைக்கு அந்த மக்களுக்கு நடந்த இன அழிப்பின் ஒரு அங்கமாக அந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளது உறவினர்கள் கையில் ஒப்படைக்கப்பட்ட உறவினர்கள் வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டிருக்கிறார்கள்……தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில்,







