ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கியுள்ள 14 லம்போகினி சொகுசு கார்களைப் பற்றிய கேள்விக்கு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சொகுசு வாகனங்கள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த நாமல் ராஜபக்ஷ,

“எனது தந்தை ஜனாதிபதியாக இருந்திருந்தால், இந்த 14 லம்போகினி கார்களும் என்னுடையவை என்றே அனைவரும் கூறியிருப்பார்கள். நல்லவேளையாக தற்போது அநுர ஜனாதிபதியாக இருக்கிறார். அதுவே எனது அதிர்ஷ்டம்” எனத் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ஷ குடும்பத்தினருடன் கடந்த காலங்களில் தொடர்புபடுத்தப்பட்ட சொகுசு வாகனங்கள் குறித்த குற்றச்சாட்டுகளை நையாண்டி செய்யும் வகையில் அவரது கருத்து அமைந்துள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 14 லம்போகினி சொகுசு கார்கள் தேங்கியுள்ளமை தொடர்பான விவகாரம் தற்போது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.







