Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு சஜித் பிரேமதாச வலியுறுத்தல்!

மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு சஜித் பிரேமதாச வலியுறுத்தல்!

22 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தற்போதைய அரசாங்கம் மக்கள் நலனில் உண்மையான அக்கறையுடன் செயற்படுகின்றது என்றால், மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை, திஸ்ஸமகாராம விஜிதபுர பகுதியில் இன்று (29) விவசாயிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், அரசாங்கம் தொடர்பில் மக்களிடம் காணப்படும் ஆதரவு மற்றும் நிலைப்பாட்டை தேர்தல் முடிவுகள் மூலம் அறிந்துகொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகள், மீனவர்கள், தொழிலாளர்கள், தொழில்முனைவோர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மாகாண சபைத் தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டின் புதிய அரசியல் பயணத்திற்கான மாற்றத்தை ஐக்கிய மக்கள் சக்தியினால் ஏற்படுத்த முடியும் எனவும் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் காணப்படும் நிலையில், நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது தொடர்பில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கம் நீதித்துறையில் தலையீடு செய்து ஜனநாயகத்தை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும், தனிக்கட்சி ஆட்சியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொலிஸ் சேவைக்கு புதிதாக 10,000 உத்தியோகத்தர்கள் இணைப்பு!
செய்திகள்

பொலிஸ் சேவைக்கு புதிதாக 10,000 உத்தியோகத்தர்கள் இணைப்பு!

August 29, 2026
யுவதியை கடத்திச் செல்ல முற்பட்ட கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!
செய்திகள்

யுவதியை கடத்திச் செல்ல முற்பட்ட கார் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

August 29, 2026
வாகரை மெதடிஸ்த திருச்சபையில் சிறுவர்களுக்கான விடுமுறை வேதாகம பாடசாலை நிறைவு!
செய்திகள்

வாகரை மெதடிஸ்த திருச்சபையில் சிறுவர்களுக்கான விடுமுறை வேதாகம பாடசாலை நிறைவு!

August 29, 2026
நேபாள வெள்ளப் பேரழிவில் அதிசயமாக உயிர்தப்பிய குடும்பம்; சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காட்சிகள்!
காணொளிகள்

நேபாள வெள்ளப் பேரழிவில் அதிசயமாக உயிர்தப்பிய குடும்பம்; சமூக வலைத்தளங்களில் வைரலாகும் காட்சிகள்!

August 29, 2026
நெல் உமிக்குள் பாலை மரக்குற்றிகள் மறைத்து கடத்தல்; கிளிநொச்சியில் லொறி சுற்றிவளைப்பு!
செய்திகள்

நெல் உமிக்குள் பாலை மரக்குற்றிகள் மறைத்து கடத்தல்; கிளிநொச்சியில் லொறி சுற்றிவளைப்பு!

August 29, 2026
பொலன்னறுவையில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி!
செய்திகள்

பொலன்னறுவையில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி!

August 29, 2026
Next Post
பொலிஸ் சேவைக்கு புதிதாக 10,000 உத்தியோகத்தர்கள் இணைப்பு!

பொலிஸ் சேவைக்கு புதிதாக 10,000 உத்தியோகத்தர்கள் இணைப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.