அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் விசேட வைத்திய நிபுணர்களுக்கான உபகுழுவின் அவசர கூட்டம் நாளை (31) நடைபெறவுள்ளது.
வைத்தியர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாத்து, அனைவரையும் உள்ளடக்கிய ஒரே “இலங்கை வைத்திய சேவை” மற்றும் சம்பளக் கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் இக்கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.
விசேட வைத்திய நிபுணர்களுக்கு மாத்திரம் தனியான சேவைப் பிரிவை உருவாக்கும் யோசனை வைத்தியர்களிடையே பிளவை ஏற்படுத்தக்கூடும் என சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பில் எதிர்கால நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.







